சேலம், ஜூன் 23- கரும்பு விளைச்சல் பாதிப்பால் வெல்லம் உற்பத்தி குறைந்துள் ளது. இதனால், சிப்பத்திற்கு ரூ.100 விலை கூடியுள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, விழுப்புரம், நாமக்கல், ஈரோடு உள் ளிட்ட மாவட்டங்களில் கரும்பாலை கள் உள்ளன. இந்த கரும்பாலை களில் தினசரி ஆயிரம் டன்னுக்கு மேல் வெல்லம் உற்பத்தி செய்யப் படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப் படும் வெல்லம் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நா டகா, கேரளாம் உள்ளிட்ட மாநிலங் களுக்கும் அதிகளவில் அனுப்பப் படுகிறது. சேலம் மாவட்டத்தில் தின் னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபு ரம், ஓமலூர், மேச்சேரி உட்பட பல பகுதிகளில் வெல்லம் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. உற் பத்தி செய்யப்பட்ட வெல்லத்தை உற்பத்தியாளர்கள் வெல்ல ஏல மண்டிக்கு கொண்டு வந்து விற் பனை செய்து வருகின்றனர். இந்நி லையில் கடும் வெயில் காரணமாக கரும்பு விளைச்சல் குறைந்ததால் வெல்ல ஆலைகளில் தற்போது உற்பத்தி சரிந்துள்ளது. அதனால் கடந்த மாதத்தைவிட நடப்பு மாதத் தில் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த வெல்ல வியாபாரிகள் கூறுகையில், தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய வெல்ல மண்டி சேலம், செவ்வாய்பேட்டை மூலப் பிள்ளையார் கோவில் தெருவில் தான் உள்ளது. மேலும் நாமக்கல், பவானி உள்ளிட்ட பகுதிகளில் வெல்ல மண்டிகள் உள்ளன. சேலம் வெல்ல மண்டிக்கு தினசரி 80 முதல் 100 டன் வெல்ல விற்ப னைக்கு வருகிறது. இங்கு விற் பனைக்கு வரும் வெல்லத்தை சேலம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த வெல்ல வியாபாரிகள், சென்னை, கோவை, மதுரை மற்றும் வடமாநில வியாபாரிகள் வாங்கிச்செல்கின்ற னர். கடந்த பொங்கல் பண்டிகை யின்போது கரும்பு வரத்து அதிக ரித்து இருந்ததால் வெல்ல ஆலை களில் வழக்கத்தை காட்டிலும் உற் பத்தி இருமடங்காக அதிகரித்து இருந்தது. கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட கடும் வெயில் காரணமாக கரும்பு விளைச்சல் சரிந்துள்ளது. இதனால் ஆலைகளுக்கு வழக்கமாக வர வேண்டிய கரும்பு வரத்து சரிந்து, வெல்ல ஆலைகளில் உற்பத்தி குறைந்து, மண்டிகளுக்கு கடந்த ஒரு மாதமாக வரத்து சரிந்துள் ளது. இதன் காரணமாக வெல்லம் விலை கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் அதிகரித்துள் ளது. வெல்லம் வரத்து சரிவால் ஏலத்திற்கு வரும் வெல்லம் உடன டியாக விற்பனைக்கு சென்றுவிடு கிறது. கடந்த மாதம் 30 கிலோ கொண்ட சிப்பம் ரூ.1,340 முதல் ரூ.1,400 வரை விற்பனை செய்யப் பட்டது. தற்போது சிப்பத்திற்கு ரூ. 100 அதிகரித்து, ரூ.1440 முதல் ரூ. 1500 வரை விற்பனை செய்யப்படு கிறது. இந்த விலை தற்காளிகம் தான். எதிர்வரும் மாதங்களில் நல்ல முறையில் பருவமழை கைகொடுத் தால், கரும்பு விளைச்சல் அதிக ரித்து, வரத்து அதிகரிக்கும். அப் போது விலையும் சரிய வாய்ப்புள் ளது, என்றனர்.