districts

img

எம்எல்ஏக்களிடம் ஜாக்டோ-ஜியோ கோரிக்கை சாசனம் அளிப்பு

ஈரோடு, ஏப்.7- பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நடைபெறும் தொடர் போராட் டத்தின் கோரிக்கை சாசனங்களை ஈரோடு எம்எல்ஏக்களிடம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வழங்கினர். பழைய பென்சன் திட்டம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதியன்று கோட்டை முற்றுகை போராட்டத்தினை ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. இந்நிலையில் தங்களது கோரிக்கை சாசனத்தினை ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் வழங் கினர். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், பவானி சட்ட மன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண் ணன், பவானிசாகர் சட்டமன்ற உறுப் பினர் ஏ.பண்ணாரி ஆகியோரை அவர் களது அலுவலகம் மற்றும் வீட்டில்  சந்தித்து வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற் றும் வட்டார நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

சேலம்

சேலத்தில் நடைபெற்ற   ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு  ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக் களை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப் பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் களை சந்தித்து மனு அளிப்பது என வும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் மனு  கொடுக்கும் இயக்கத்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் ஜாக்டோ - ஜியோ அமைப் பின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் ந.திருவரங்கன்,  திருமுருக வேல் தலைமையில் நடைபெற்ற ஒருங் கிணைப்பு கூட்டத்தில் ஒருங்கிணைப் பாளர்கள் சுரேஷ், கோவிந்தன், ஜான், சந்திரசேகர் உள்ளிட்டு பலர் பங்கேற் றனர்.