கோவை, பிப்.22- வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் சுற்றுலா பயணி களை வரவேற்கும் விதத்தில் ஜகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கோவை மாவட்டம், வால்பாறை பகுதியை பொறுத்த வரை ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய காலமாகும். அதன்படி, தற்போது இருந்தே சுற்றுலா பயணிகள் அதிகள வில் வர தொடங்கி விட்டனர். மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதத்திலும், கோடைக்காலம் தொடங்கவுள்ளதை அறிவிக்கும் வகையிலும் வெளிநாட்டு வகை மலரான ஜகரண்டா மலர்கள் வால்பாறை பகுதியில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும், வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையிலும், வனப்பகுதிக்குள்ளும் நீல நிறத்தில் பூத் துக்குலுங்கி வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.