கோபி, ஜன. 28- கோபி செட்டி பாளையத்தின் வளர்ச் சியை தடுத்தவர் அதி முக முன்னாள் அமைச் சர் செங்கோட்டையன் என திமுக பொதுக்கூட் டத்தில் விமர்சித்தனர். கோபிசெட்டிபாளையத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பொதுக்கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் பேசுகையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்) கோபியின் வளர்ச்சியை தடுக்கிறார். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பின ராக உள்ளவர் வளர்ந்து வரும் இப்பகுதியில் பேருந்துநிலை யம் விரிவாக்கம் இல்லை, ஒரு தொழிற்சாலைகள் இல்லை, ஏழை மாணவ, மாணவிகள் படித்து பயன்பெறும் வகையில் அரசு கல்லூரி இல்லை. கோபிசெட்டிபாளையம் மாவட்டம் ஆவதை தடுப்பதே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான். கடந்த தேர்தலின்போது அவர் வாக்குகள் பெற வேண் டும் என்பதற்க்கா நகராட்சிக்கு கடன் சுமையை ஏற்படுத்தி சென்றார். எனவே கோபிசெட்டிபாளையம் பகுதியை வளர்ச் சியான பாதையில் கொண்டு செல்ல வரும் தேர்தல்களில் திமுக அரசு அமைய பொதுமக்கள் திமுகவை ஆதரிக்கு வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் நாகராஜ், கோபி தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டி.கதிர்வேல், மாணவரணியினர், மற்றும் திமுக நிர்வாக்கள் பலர் கலந்து கொண்டனர்.