தருமபுரி, பிப்.20- தம்பி பதிப்பகத்தின் சார்பில், கவிஞர் மழவை தமிழ முதனின் நூல் வெளியீட்டு விழா தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்றது. தம்பி பதிப்பகத்தின் உரிமையாளர் யாழ் திலீபன் தலைமை வகித்தார். திராவிடர் கழக இளைஞர் அணி மாநில நிர்வாகி மா.செல்லதுரை வரவேற்றார். திமுக முன் னாள் தொண்டரணி மாநில அமைப்பாளர் மு.ராஜேந்திரன் நூல்களை வெளியிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் த.கு.பாண்டியன் பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிங்காரவேல், “ஜாதியை அழகுபடுத்தும் அரசியல்” என்ற நூல் குறித்து மதிப்புரையாற்றினார். முடி வில், நூலாசிரியர் மழவை தமிழமுதன் ஏற்புரையாற்றினார். இ.சமரசம் இணைப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் விவசாயிகள் பிரிவு மாநில துணைத்தலைவர் கிள்ளிவளவன், மாவட்ட துணைச்செய லாளர் ஆதித்தமிழன், பொறியாளர் அணி மாநில நிர்வாகி செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், ப.பெரியார் நன்றி கூறினார்.