திருப்பூர், மார்ச் 6 - மின்சார வாரியத்தில் பணியாற்றும் தொழிற்பயிற்சி முடித் தோர், இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் தொடர் பாக மாநில மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலா ஜியை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்துள்ள னர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழிற்பயிற்சி முடித் தோர் நலச் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழா திருப் பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த சங்கத்தின் மாநில அமைப்பு செயலா ளர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநிலத் தலைவர் மகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் நந்தகு மார் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். இந்தக் கூட்டத்தில் மின்சார வாரியத்தில் தொழில் பயிற்சி முடித்தவருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக மாநில மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங் களில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். விழாவின் முடிவில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் ஞானசிவம் நன்றி கூறினார்.