கோவை அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்து நெரி சலை குறைக்க மாநகராட்சி சார்பில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டது. இருப்பினும் இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், தொடர்ந்து சாலைகளில் இருசக் கர வாகனங்கள் நிறுத்தப்படுகி றது. எனவே கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகி றது. சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்றனர். மாநக ரின் மையப்பகுதியில் அமைந் துள்ள இம் மருத்துவமனையில் போதிய பார்க்கிங் வசதி இல்லை. இதனால், மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மருத்துவமனையின் முகப்பில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கோவை அரசு மருத்துவமனை உள்ள திருச்சி சாலையில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி வாகன திருட்டு, தலைக்கவசம் திருட்டு நடப்பதாக காவலர்களிடம் புகார்கள் குவிந்து வருகிறது. அதே போல் அங்குள்ள பேருந்து நிறுத்தத்திலும் இரு சக்கர வாக னங்கள் நிறுத்தப்படுவதால், அவ்வ ழியாக வரும் பேருந்துகள் திரும்ப முடிவதில்லை. மேலும், பயணிகள் காத்திருக்க முடியாத சூழல் நிலவு கிறது. எனவே முறையான பார்க் கிங் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். பார்க்கிங் அமைத்தும் பயனில்லை: கோவை மாநகராட்சி சார்பில், கோவை அரசு மருத்துவமனை எதிரே ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் பார்கிங் வசதி செய்து கொடுக்கப் பட்டது. இதை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இது 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாக னங்களும், 80 கார்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு 2 மணி நேரத்திற்கு ரூ.10ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.30 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட் டது. இந்த பார்க்கிங் செயல்பாட் டுக்கு வந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும், பொதுமக்கள் இதை பயன்படுத்தாததால், கோவை அரசு மருத்துவமனை உள்ள திருச்சி சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் தொடர்வதோடு, அவசர ஊர்தி செல்ல முடியாமல் திணறி வருகிறது. 2 மணி நேரத்திற்கு 30 ரூபாயா! இது குறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், மாநகராட்சி சார் பில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள் ளது வரவேற்கத்தக்கது. ஆனால் பார்க்கிங் இருப்பது எங்களுக்கு தெரியவில்லை. மருத்துவமனை அருகே வாகனத்தை நிறுத்த சென் றபோது போலீசார் அபராதம் விதிக்க வந்த போது தான் பார்க்கிங் குறித்து தெரிவித்தனர். அதன்பின் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத் தியதாகவும், அதே போல காரர்க ளுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ரூ.30 பார்க்கிங் கட்டணமாக வசூ லிப்பது மிகவும் அதிகம். மருத்து வமனைக்கு வருவோர் எப்போது வெளியே வருவோம் என தெரி யாது. எனவே 24 மணி நேரத்திற்கு ரூ.30 என மாற்ற வேண்டும். கட்ட ணத்தை எளிமையாக்க வேண்டும் என தெரிவித்தனர். திணறி நிற்கும் அவசர ஊர்தி: அதே போல இரு சக்கர வாக னங்களை நிறுத்த வரும் பொதுமக் களிடம் அங்குள்ள அவசர ஊர்தி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் போக் குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறினால், அவர்களிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டு அதே சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலை மறைத்தவாறு நிறுத்தப்படும் வாக னங்களால் அவசரகதியில் வரும் அவசர ஊர்திகள் உள்ளே செல்ல முடியாமல் திணறி நிற்கிறது. அரசு மருத்துவமனை எதிரே மாநகராட்சி சார்பில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது, குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்பு ணர்வு இல்லாததே இந்த பிரச்ச னைக்கு காரணம். எனவே போக்கு வரத்து காவலர்கள் அல்லது மாந கராட்சி ஊழியர்கள் இருசக்கர வாக னங்களை நிறுத்த வரும் மக்களிடம் பார்க்கிங் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பெரும்பாலும் ஏழை எளிய மக்களே அரசு மருத்துவமனைக்கு வருவ தால் கட்டணம் இல்லாத பார்க்கிங் வசதியை ஏற்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது. - கவி