திருப்பூர், நவ.19- திருப்பூர் மாநகராட்சி ஆத்துப்பாளையம் அருகே குப்பையை அகற்ற வந்த ஜேசிபி குப்பையிலையே பல நாட்களாக நிற்கிறது. குப்பையையும், குப்பை அள்ள வந்த வாக னத்தையும் உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்துப்பாளையம் – ஜெய் நகர் செல்லும் சாலையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் குப்பை கொட்டி வந்தனர். இதனால், பாதி சாலை குப்பையில் மறைந்துவிட்டது. பள்ளி குழந்தைகள், தொழிலாளர்கள் பயன்படுத்தி வரும் சாலையில் குப்பை கொட்டப்பட்டுள்ள தால், நோய் தொற்று ஏற்படும் சூழல் நிலவி யது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முதலாம் மண்டல அலு வலகத்தில் உடனடியாக குப்பையை அகற்ற கோரி மனு அளித்தனர். இதையடுத்து குப் பையை அகற்றுவதற்காக மாநகராட்சி வாக னம் இப்பகுதிக்கு வந்தது. ஆனால் வந்த வாக னம் பழுது ஏற்பட்டு குப்பையை அள்ளும் இடத்திலேயே நின்றுவிட்டது. 10 நாட்களுக்கு மேலாக இந்த ஜேசிபி இங்கேயே இருக்கி றது. எனவே குப்பையையும், குப்பை அள்ள வந்த வாகனத்தையும் உடனடியாக இங்கி ருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வாலி பர் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் சந் தோஷ் வலி யுறுத்தியுள் ளார்.