கோவை, மார்ச் 13 - எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து பொள்ளாச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி திரு வள்ளுவர் திடலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா குழு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்கிளை உறுப்பினர் சசிதரன் தலைமை தாங்கினார். இதில், தாலுகா செயலாளர் அன்பரசன், தாலுகா குழு உறுப்பினர் அங்கமுத்து ரவி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாதேஸ் வரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற் றினர். முன்னதாக, எரிவாயு மானியத்தை ஏழை எளியோர் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து விட்டு, அதிகாரத்திற்கு வந்த பிறகு மோடி அரசு முழுமையாக ரத்து செய்தும், எரி வாயின் விலை 1100 ரூபாயாக உயர்த்தி யுள்ளது என குற்றம்சாட்டி, எரிவாயு சிலிண்டர்க்கு பாடை கட்டி, நாமம் இட்டு ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.