districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சேலம், மார்ச் 3- ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியில் நெல் கொள்முதல்  நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கீரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல்  நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய செயலாளர் வே.செழியன் திறந்து வைத்தார். கீரிப்பட்டி பேரூராட்சி தலைவர் தேன் மொழி காங்கமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் என பலர் கலந்து கொண் டனர்.

வாலிபர் அடித்து கொலை - மூவர் கைது

பொள்ளாச்சி, மார்ச் 3- வாலிபரை அடித்து கொலை செய்த மூவரை போலீசார்  கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த பிரபாகரன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். பூசாரிபட்டி பூபதி, கள்ளிப்பாளையம் புதூர் தீன தயாளசாமி, ஆலாம்பாளையம் சந்தோஷ்குமார் ஆகியோர் அதே தொழிற்சாலையில் ஓட்டுநர்களாக பணியாற்றி வரு கின்றனர். சில நாட்களுக்கு முன் சந்தோஷ்குமாரிடம் பிரபா கரன் பணம் பெற்று உள்ளார். கடந்த பிப்.28 ஆம் தேதி இரவு ஆலாம்பாளையம் பி.ஏ.பி.வாய்க்கால் மேட்டில்  அமர்ந்து பிரபாகரன் மது குடித்து கொண்டு இருந்துள்ளார்.  இதை பார்த்த சந்தோஷ்குமார், பூபதி, தீனதயாளசாமி ஆகி யோர் அங்கு வந்து கடனை கேட்டு தகராறு செய்துள்ளனர். வாய்த்தகராறு முற்றி, மூன்று பேரும் சேர்ந்து பிரபாகரனை அடித்து, கீழே தள்ளி உள்ளனர். அப்போது எதிர்பாராத வித மாக பிரபாகரன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம்  ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பிரபாகரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த் தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை   பலனளிக்காமல் பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் கொலை வழக்கு பதிவு  செய்து பூபதி, தீனதயாளசாமி, சந்தோஷ்குமார் ஆகி யோரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில்  அடைத்தனர்.

பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம்

உதகை, மார்ச் 3- பச்சை தேயிலை விலை கிலோவுக்கு  ரூ.19.23 விலை நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை  சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயி லையை தனியார் தொழிற்சாலைகள் மற்றும்  கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு விநி யோகித்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்திய தேயிலை  வாரியம்  ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளில்  தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல்  செய்து உள்ள பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலையை நிர்ணயம் செய்துவருகிறது.  அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை  விலையாக கிலோவிற்கு 19 ரூபாய் 23 பைசா  என நிர்ணயம் செய்துள்ளது. இதை பிப்ரவரி  மாதம் தேயிலை ஏல விற்பனை விலையின் அடிப்படையில் தேயிலை வாரியம் நிர்ண யித்து உள்ளது. இந்த விலையினை தேயிலை  தொழிற்சாலைகள் தவறாமல் விவசாயி களுக்கு வழங்குகிறதா? என்று தேயிலை வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருவ தாக தேயிலை வாரிய முதன்மை அதிகாரி முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

தீயில் கருகி முதியவர் பலி மது போதையில் பீடி பற்ற வைத்த போது பரிதாபம்

கோவை, மார்ச். 3- மதுபோதையில் படுத்துக்கொண்டே பீடி  பற்ற வைத்தபோது, ஆடையில் தீ பற்றி உடல்  முழுவதும் எரிந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை-நீலிகோணாம்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்தவர்  நாகராஜ்(60). இவர் மதுபோதையில் ஒண்டிப் புதூர்- திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், படுத்து கொண்டே பீடி பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தார். அப்போது அவரது உடையில் தீப்பிடித்தது. பின்னர் மளமளவென உடலில் பரவியது.  அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை  அணைத்து, கோவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  நாகராஜ்  உயிரிழந்தார். இது தொடர்பாக சிங்கா நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

தனியார் பேருந்தின் அதிக வசூல்: அதீத வேகத்திற்கு பெண் பலி

அவிநாசி, மார்ச் 3- திருப்பூர் அருகே, அதிக வசூல்,  அதீத வேகத்தில் தனியார் பேருந் தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண், அவர் இறங்குவதற்குள் ஓட்டு நர் அலட்சியமாகப் பேருந்தை இயக் கியதால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி  அந்த பெண் பரிதாபமாக உயிரிழந் தார்.  திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் செல்வி. இவர், அம் மாபாளையம் பேருந்து நிறுத்ததில் இருந்து அவிநாசி செல்வதற்காக கோவை செல்லும் எஸ்ஆர்டி என்ற  தனியார் பேருந்தில் வியாழனன்று ஏறியுள்ளார். அப்போது பேருந்து நடத்துநர் அவிநாசி, தெக்கலூர் பகு திக்குள் பேருந்து செல்லாது புறவழி சாலை வழியாகத்தான் செல்லும் எனக்கூறி, அப்பெண்ணை கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதைதொடர்ந்து, அவர் பேருந் தில் இருந்து இறங்குவதற்குள் ஓட்டு நர் அவசரப்பட்டு பேருந்தை இயக்கி யுள்ளார். அப்போது செல்வி பேருந் தின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த  காயமடைந்துள்ளார். அருகில் இருந் தவர்கள் செல்வியை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனு மதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரி ழந்தார். இந்த சம்பவம் குறித்து திரு முருகன் பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இது குறித்து பொதுமக்கள் கூறிய தாவது, திருப்பூரிலிருந்து கோவை  செல்லும் தனியார் அரசு பேருந்துகள்  திருப்பூரில் அதிக பயணிகளை ஏற்ற  வேண்டும் என்று தாமதம் செய்து விட்டு, அந்த நேரத்தை ஈடுகட்டுவ தற்காக, அவிநாசி நகரம், தெக்கலூர்  பகுதிக்குள் வராமல் தேசிய நெடுஞ் சாலையில் அசுர வேகத்தில் சென்று விடுகின்றனர். அவிநாசி, தெக்கலூர் செல்லும் பயணிகள் ஏற்றினாலும் அவிநாசி நகருக்கு 2 கிமீ முன்பே  தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும்  பாலத்திற்கு அருகில் கட்டாயப்ப டுத்தி இறக்கிவிட்டு செல்கின்றனர். இதுதொடர்பாக பல முறை புகார்  தெரிவித்து,காவல் துறை, வட்டாரப்  போக்குவரத்து அலுவலர் என யாரும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை.  தற்போது தனியார் பேருந்து நடத் துவோரின் லாபவெறிக்கும், அவசர உணர்வுக்கும் அநியாயமாக ஒரு பெண் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர் கள் அவிநாசி மற்றும் தெக்கலூருக் குள் பேருந்துகள் வராது என்று எழுத் துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் நாங்கள் தனியார் பேருந்துகளின் ஏறு வதை நிருத்தி விடுகிறோம். இதுகு றித்து மாவட்ட நிர்வாகம் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு கூறினர்.

அமராவதி பகுதிகளில் நெல் அறுவடை துவக்கம்

தாராபுரம், மார்ச் 3- தாராபுரம் பழைய அமராவதி பாசன  பகுதியில் 8,200 ஏக்கரும், புதிய அமரா வதி பாசனப்பகுதியில் 9800 ஏக்கர்   பரப்பிலும் நெல் சாகுபடி செய்யப்பட் டுள்ளது. தற்போது அறுவடை பட் டத்தை அடுத்து இரு பாசனப்பகுதியி லும் நெல் அறுவடை துவங்கி உள்ளது.  தாராபுரம் வட்டாரத்தில் அலங்கியம்  உள்பட ஏழு பகுதிகளில் நெல் கொள்மு தல் நிலையம் துவங்க அரசு அனுமதித் துள்ளது. அரசு கொள்முதல் நிலையங் களில் சன்ன ரகத்திற்கு கிலோ 21 ரூபாய்  60 பைசா வீதமும் மோட்டா ரகத்திற்கு 21  ரூபாய் 15 பைசா வீதமும் விலை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. 60 கிலோ கொண்ட 2 மூட்டைகளுக்கு சலகை அடிப்படையில் ரூ.2600 நெல் கொள்மு தல் நிலையங்களில் வழங்க உத்தரவி டப்பட்டுள்ளது. அரசு கொள்முதல்  நிலையங்களில் சலகைக்கு ரூபாய் 300  கூடுதலாக கிடைப்பதால் விவசாயிக ளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம்  ரூபாய் வரை அரசு கொள்முதல் நிலை யங்களில் விற்பனை செய்வதன் மூலம்  கிடைக்கும். இந்த ஆண்டு இயற்கை  சீற் றம் காரணமாக உற்பத்தி  குறைந்துள்ள தால் அரசு நெல் கொள்முதல் நிலையங் களில் முழு கொள்ளளவில் விதிமுறைக ளுக்கு உட்பட்டு நெல் கொள்முதல்  செய்ய வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, மார்ச் 3- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்  நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.48 லட் சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம்  2367 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச்.பி.டி.  ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,000 முதல் ரூ.8,019  வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது.  மொத்தம் ரூ.48லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது.

அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:39.46/60அடி நீர்வரத்து:798கன அடி வெளியேற்றம்:1174கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:54.04/90அடி.நீர்வரத்து:39கனஅடி வெளியேற்றம்:121கனஅடி

பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி

கோவை, மார்ச் 3- போலியான இனையதள முகவரி அனுப்பி பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை, கணபதியை சேர்ந்தவர் கலைசெல்வி (40). இவர் ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் பெறுவது எப்படி என இணையத்தில் தேடினார். அதில், உள்ள வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள்  ஆன்லைனில் நீங்கள் செய்யும் முதலீட்டு தொகைக்கு ஏற்ப  கமிஷன் அடிப்படையில் அதிக லாபம் பெறலாம் என தெரி வித்தனர். மேலும் ஒரு இணையதள முகவரியை அனுப்பி அதில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்வது எப்படி? என செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், இதில், நீங்கள் முதலீடு செய்யும் தொகையை எப்பொழுது வேண்டுமானா லும் கமிசன் தொகையுடன் நீங்களே எடுத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய கலைசெல்வி தனது  3 வங்கி கணக்கில் இருந்து ரூ. 19 லட்சத்து 2 ஆயிரத்து 993 ரூபாயை ஆன்லைனில் முதலீடு செய்தார். ஆனால், அவர்கள்  சொன்ன படி தனது வங்கி கணக்கில் கமிசன் தொகை சேர வில்லை.  மேலும், முதலீட்டு தொகையை தனது வங்கி கணக்கில்  வரவு வைக்க முடியவில்லை. போலியான இணையதள முக வரியை அனுப்பி ரூ.19 லட்சத்து 2 ஆயிரத்து 933ஐ நூதன மோசடி செய்து விட்டனர். இது குறித்து கலைசெல்வி கோவை  மாநகர குற்றவியல் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்தால் காய்ச்சல்

தருமபுரி, மார்ச் 3- தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை கால மாக இருமல், உடல் வலியு டன் கூடிய காய்ச்சல் பாதிப்பு கள் தீவிரமாக பரவி வருகி றது. அது எந்த வகையான தொற்று என்பதைக் கண்டறி வதற்கான ஆய்வை பொது  சுகாதாரத்துறை முன்னெடுத் துள்ளது. அதன்படி, காய்ச்ச லால் பாதிக்கப்பட்டவர் களின் சளி மாதிரிகளை ஆய் வுக்குட்படுத்தி வைரஸின் தன்மை மற்றும் அதுகுறித்த விவரங்கள் கண்டறியப்பட உள்ளன. இதற்கான ஆய்வ கப் பரிசோதனை உபகர ணங்கள் தருவிக்கப்பட்டு, அந்தப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளதாக பொது சுகா தாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பருவமழை மற்றும் குளிர் காலம் நிறைவடைந்தாலும், தட்பவெப்ப நிலையில் ஏற் படும் மாற்றம் காரணமாக, காய்ச்சல் பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சென்னை மற்றும் அதைச்  சுற்றியுள்ள பகுதிகளில் குழந் தைகள் மற்றும் முதியவர்க ளுக்கு காய்ச்சல், சளி, இரு மல், தொண்டை வலி, உடல் வலியுடன் கூடிய பாதிப்பு ஏற் பட்டு வருகிறது. மேலும், மருத்துவ சிகிச் சையின் மூலம் 5-லிருந்து 7  நாள்களுக்குள் அந்த பாதிப் பிலிருந்து மீண்டு விடலாம்.  இருந்தாலும், ஒருவரிடமி ருந்து மற்றொருவருக்கு எளி தில் காய்ச்சல் தொற்றி கொள் வது அச்சத்தை ஏற்படுத்தியி ருக்கிறது என  மருத்துவர் கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் அட்டைபெற முகாம் 

தருமபுரி, மார்ச் 3- தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திற னாளிகள்  வேலை அட்டை பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக  பிரதி மாதம் 2 ஆவது செவ்வாயன்று வட்டார வளர்ச்சி அலுவ லர் அளவிலும் இருமாதங்களுக்கு ஒரு முறை கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) / திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 10  ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊராட்சி  மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு  முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமினை பயன்படுத்தி தாங் கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவ லகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற  வேலை அட்டையினை பெற்று பயன்பெறலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து

சேலம், மார்ச் 3- கோவை - திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதை யில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலம் ரயில் நிலையத்திலிருந்து மதியம்  1.40 மணிக்கு புறப்படும் சேலம் - கோவை பயணிகள்  ரயில் வியாழனன்று முழுவ துமாக இயக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த ரயில் மார்ச் 31 ஆம்  தேதி வரை ரத்து செய்யப் பட்டுள்ளது. இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் கோவை ரயில் நிலையத்தில்  இருந்து காலை 9.05 மணிக்கு  புறப்படும் பயணிகள் ரயி லும், மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த ரயிலும் முழுவது மாக ரத்து செய்யப்பட்டுள் ளது.