districts

உலகக்கோப்பை: அணியில் தமிழக வீரர்கள் இல்லாதது வருத்தம்

நடராஜன் பேட்டி சேலம், செப்.11- உலகக்கோப்பை கிரிக்கெட் தொட ருக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டு  வீரர்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது என இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச் சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம் விற்பனை நிறுவ னத்தை இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களி டம் அவர் பேசுகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந் திய அணி சிறப்பாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்கள் என அனைவரும் கலந்துள்ளனர். இந்தியாவில் உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதால் நமக்கு சாதகமாக உள்ளது. இதனால் இந்திய அணி உலகக்கோப்பை வெல்வ தற்கு அதிக வாய்ப்பு உள்ளது, என் றார். மேலும், உலகக்கோப்பை கிரிக் கெட் தொடரில் சவாலான அணிகளாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள் ளிட்ட அணிகள் இருந்தாலும், இந்தியா வில் நடைபெறுவதால் நமக்கு சாதகம் அதிகமாக உள்ளது. அனைத்து அணிக ளும் சரிசமமாக, சவாலான அணியா கவே உள்ளது. விராட்கோலி, ரோஹித் சர்மா உள் ளிட்டோர் அடுத்த தலைமுறை வீரர் களை வளர்த்து வருகின்றனர். இதனால் புதிய இளம் வீரர்கள் அணிக்குள் தேர் வாகி வருகின்றனர். அதேசமயம் உல கக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இல்லாதது வருத்தம ளிப்பதாக உள்ளது. தமிழக வீரர்களில் ஒருவராவது உலகக்கோப்பை அணி யில் பங்கேற்று வந்தனர். ஆனால், இந்த  முறை இல்லாதது எனக்கு மட்டுமில்லா மல், தமிழகத்தில் உள்ள அனைவருக் கும் வருத்தமாக தான் உள்ளது, என் றார்.