உடுமலை, ஜன.20- தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புகளை எடை மேடையி லிருந்து அரவைக்கு கொண்டு செல்ல புதிய இயந்திரங்கள் இல்லாமல் உள்ளதாகவும், பல ஆண்டுகளாக நவீனப் படுத்தப்படாமல் உள்ளதால் அமராவதி கூட் டுறவு சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்கு வதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு கின்றனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் 1960 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற சிறப்புடன் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அன்றைய தொழில் நுட்பத்தின்படி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு நாள் ஒன்றுக்கு 1,250 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டதாக இயங்கத் தொடங்கியது. பின்னர் 1995 ஆம் ஆண்டு இந்த ஆலையின் கழிவுகளிலிருந்து எரிசாரயம் தாயாரிக்கும் ஆலையும் தொடங் கப்பட்டது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை அரவை பருவமாகும். தொடர்ந்து 60 ஆண்டு களை கடந்து இயங்கும் இயந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் ஆலையின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் ஆலையை தொடர்ந்து இயக்க முடியாமல் நிதி நெருக்கடி உருவாகிறது. தொழிலாளர்க ளுக்கு சீராக சம்பளம் வழங்கப்படுவ தில்லை. இதற்கு தீர்வாக புதிய இயந்திரங் களை பொருத்தி ஆலையைப் புதுப்பிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 - 2023 ஆண்டு 35 நாட்க ளில் அரைக்கப்பட வேண்டிய கரும்பு இயந்தி ரங்கள் பழுதால் 61 நாட்கள் அரவை நடை பெற்றது. இதில், 7 சதவீதம் சர்க்கரை கட்டு அடிப்படையில் 45.500 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2023 – 2024 ஆம் ஆண்டு விவசாயிகளிடம் கரும்பு முன்பதிவு நடந்து வருகிறது
. இதில், தற் போது வரை சுமார் 1500 ஏக்கர் கரும்பு பதிவில் 50 ஆயிரம் டன் கரும்புகளை ஆலைக்கு தர விவசாயிகள் முன்பதிவு செய்து உள்ளார் கள். இது குறித்து தமிழ்நாடு கருப்பு விவசாயி கள் சங்கத்தின் தலைவர் பாலதண்டபாணி கூறுகையில், 1960 ல் தொடங்கப்பட்ட ஆலை யில் 11 சதவீதம் பிழிதிறன் கொண்ட இயந் திரங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய் யாததால் 7 சதவீத பிழி திறனைக்கூட அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு சிறிய அளவில் உற்பத்தி அதிகப்ப டுத்த செய்த மாற்றம் தான் இன்று வரை உள் ளது. கரும்புகளை எடை மேடையிலிருந்து அரவைக்கு கொண்டு செல்ல புதிய இயந் திரங்கள் (கன்வெயர்) இல்லை. மேலும் இயந் திரங்கள் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய போதிய உதிரிப் பாகங்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் இல்லாமல் இருப்பதால் மீண்டும் ஆலையை இயக்க காலதாமதம் ஏற்படுகிறது. கரும்பு சாறுகளை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை உள்ள தால் தரமான சர்க்கரை கிடைப்பது இல்லை. இதனால் ஆலைக்கு தொடர் இழப்பு ஏற்படுகி றது. தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க் கரை ஆலை தற்பொழுது நஷ்டத்தில் இயக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி ஆலையை நவீனப் படுத்த வேண்டும் என்றார்.