districts

img

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் வெற்றி

சேலம், மே 29- குடிமனை பட்டா வழங் கியும், வருவாய் கணக்கில்  கொண்டு வராமல் இருப் பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஆத்தூர் தாலுகா போராட்டம் நடத்த அறை கூவல் விடுத்த நிலையில், அதிகாரிகள் உடனடியாக கோரிக்கைகள் நிறை வேற்ற அதிகாரிகள் உறுதியளித்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா,  கீழ் தொம்பை கிராமத்தில், 19 குடும்பத் திற்கு குடிமனை பட்டா கொடுக்கப்பட் டுள்ளது. ஆனால், வருவாய் கணக்கில், வரு வாய்த்துறையினர் ஏற்றாமல் இருந்துள் ளனர். இதனை கண்டித்தும், பைத்தூர் கல்லுக்கட்டு பகுதியில் உள்ள மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்ட மிடப்பட்டது.  இதற்கான போராட்ட தயாரிப்பு பணி களை மேற்கொண்டு, துண்டறிக்கை உள்ளிட் டவைகள் விநியோகிக்கபட்டது. இதனை யடுத்த, ஆத்தூர் வட்டாட்சியர் மாணிக்கம்  மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இதில், கீழ் தொம்பை கிராமத்தில் 19 குடும்பத்திற்கும்  இரவுக்குள், வருவாய் கணக்கில் ஏற்றப் படும்,  குடிமனை பட்டா கேட்டு கொடுக்கப் பட்ட அனைத்து மனுக்களுக்கும் ஜூன் 11  ஆம் தேதிக்குள், குடிமனை பட்டா வழங்கப் படும். என உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் விலக்கி கொண்டனர்.  இந்த பேச்சுவார்த்தையின்போது மார்க் சிஸ்ட் கட்சியின் ஆத்தூர் தாலுகா செய லாளர் எ.முருகேசன், தாலுக்கா குழு உறுப் பினர் பிரபு, கீழ் தொம்பை கிளை செய லாளர் முருகேசன் உள்ளிட்ட   நிர்வாகிகள், பாதிக்கபட்ட மக்கள் இதில் பங்கேற்றனர்.