districts

img

உயிரிழந்த மின்வாரிய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணியாணை வழங்கல்

நாமக்கல், ஜன.25- பணியின் போது உயிரிழந்த மின்வாரிய பணி யாளர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு கருணை அடிப் படையிலான பணி ஆணைகளை சுற்றுலாத்துறை அமைச் சர் மா.மதிவேந்தன் செவ்வாயன்று வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணி காலத்தில் உயிரிழந்த பணி யாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படை யிலான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சி யர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் செவ்வாயன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங் கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதையடுத்து மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணி காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 6  நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி ஆணை களை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கி னார். இதில், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் க.பால சுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனி வாசன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.