districts

img

உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு

சேலம், டிச.13- மேட்டூர் உழவர் சந்தையில் 54 விவசாயிகளுக்கு புதிய  அடையாள அட்டை திங்களன்று வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள உழவர் சந்தைக்கு  கொளத்தூர், மேச்சேரி மற்றும் நங்கவள்ளி ஆகிய ஒன்றியங் களிலிருந்து ஏராளமான விவசாயிகள், விவசாய விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந் நிலையில், திங்களன்று மேட்டூர் உழவர் சந்தை நிர்வாக  அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பழைய அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய விவசாயிகளுக்கு புதிய  அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா விற்கு வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு புதிய அட்டைகளை வழங்கினார். இவ்விழாவில் 43 விவசாயிகளுக்கு பழைய அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டது. மேலும், புதியதாக விண்ணப்பித்த 14 விவசாயிகளுக்கு புதிய அடை யாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், உழவர் சந்தை யில் காய்கறிகளை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள்  புதியதாக விண்ணப்பிக்கலாம்என்று வேளாண்மை  துணை இயக்குநர் தெரிவித்தார்.