districts

img

திருப்பூர் நிலவள கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்

திருப்பூர், மார்ச் 23- தமிழக அரசு அறிவித்த அடிப்படை யில் 5 சவரனுக்கு கீழ் அடமான கடன் பெற்றவர்களுக்கு திருப்பூர் நிலவள  கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புத னன்று நடைபெற்றது. திருப்பூர் நேரு வீதியில் திருப்பூர் கே.677 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வங்கி (நிலவள  வங்கி) செயல் பட்டு வருகிறது. இந்த வங்கியில் 5  சவரன் அளவுக்கு கீழ் நகை அடகு வைத்தவர்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பின்படி கடன் தள்ளுபடி செய் யப்பட்டு அதற்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் அவர்களது நகை கள் திரும்ப வழங்கப்பட்டன.  தமிழக அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், இந்த வங்கியில் மொத் தம் 1019 பேர் ரூ.4 கோடியே 39 லட்சம் கடன் தள்ளுபடி பெறுகின்றனர். முதல்  கட்டமாக புதனன்று சுமார் 50 பேருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழும், நகை களும் திரும்ப வழங்கப்பட்டன. அதன் படி, திருப்பூர் நிலவள கூட்டுறவு வங்கி யில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர் களுக்கு, வங்கி இயக்குநர்கள் பி. மோகன், ஈஸ்வரன்  மற்றும் துரைசாமி உள்ளிட்டோர் கடன் தள்ளுபடி சான்றி தழ் மற்றும்  நகைகளை வழங்கினர். இந்த கூட்டுறவு வங்கியின் செயலர்  ஜெயக்குமார் உள்பட அலுவலர்க ளும் உடன் இருந்தனர்.