districts

img

பாலஸ்தீனம் மீதான இன அழிப்பு போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்

பாலஸ்தீனம் மீதான இன அழிப்பு போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும், என வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியச் செயலாளர் எம்.லட்சுமணன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரவி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் நவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.