சேலம், நவ.15- இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை கண் டித்து சேலத்தில், இஸ்லா மிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இஸ்ரேல் - பாலஸ்தீ னம் இடையே உச்சகட்ட போர் நடந்துவருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரி ழந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதி ராக இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பி னர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாமியா மஸ்ஜித் ட்ரான்ஸ்போர்ட் முத்து வல்லி அன்வர் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்க ணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங் களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட தமிழ் மாநில ஜமாத் உலமா சபை, ஜமாத்துகள், இமாம்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆத ரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பி னர்.