உடுமலை, பிப்.27- உடுமலை அரசு மருத்துவமனை யில் விபத்து சிகிச்சைக்கு தேவையான வசதிகள் இல்லாததால் சிறிய விபத்து என்றாலும் கோவைக்கு செல்ல வேண்டி யுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். உடுமலை நகரின் மையப்பகுதி யான வ.உ.சி வீதியில் சுமார் 2.50 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் அரசு மருத்து வமனையில் 14க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகளும், 3 அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவுகள் உள் ளது. இந்த மருத்துவமனையில் தினமும் உடுமலை, மடத்துக்குளம் தாலுக்கா பகுதியின் மக்களும், குழிப்பட்டி, தளிச்சி, மாவடாப்பு உள்ளிட்ட செட்டில் ்மெண்ட் பகுதியின் மலைவாழ் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகிறார்கள். இங்கு 200க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றர். விபத்து ஏற்பட்டு இந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டும் செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு மற்றும் தலைகாய சிகிச்சை பிரிவு இல்லாதது தான். பொது மக்கள் அதிகம் பயன்ப டுத்தி வரும் உடுமலை அரசு மருத்துவம னையில் அனைத்து பிரிவுகளுக்கும் உரிய சிகிச்சை என்பதை உத்திரவாதப் படுத்த வேண்டும், என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.