districts

ஒன்றிய பட்ஜெட் மக்களுக்கானதா? கருத்தரங்கம்

தருமபுரி, மார்ச் 1- காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில், ஒன்றிய பட்ஜெட் மக்களுக் கானதா? என்ற தலைப்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது. அண்மையில் தாக்கல் செய்யப் பட்ட ஒன்றிய பட்ஜெட் – 2025 மக்க ளுக்கானதா? என்ற தலைப்பில், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி சிஐடியு மாவட் டக்குழு அலுவலகத்தில் சனியன்று கருத்தரங்கம் நடைபெற்றது. சங் கத்தின் கோட்ட இணைச்செயலா ளர் பி.சந்திரமௌலி தலைமை வகித் தார். பாலக்கோடு கிளைச் செயலா ளர் எம்.நரசிம்மன் வரவேற்றார். தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்ட மைப்பு துணைத்தலைவர் சி.முத்துக் குமாரசாமி, கோட்ட துணைத்தலை வர் ஏ.மாதேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்வில், மேல்தட்டு மக்க ளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து  செய்ய வேண்டும். ஏழை, நடுத்தர மக்கள் மீது வரி விதிப்பதை  கைவிட்டு, கார்ப்பரேட்டுகளுக் கான செல்வ வரியை உயர்த்த வேண் டும். பொதுத்துறை நிறுவனங்க ளின் பங்கு விற்பனை மூலம் பட் ஜெட் செலவினங்களை குறைப் பதை தடுக்க வேண்டும். இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை உரு வாக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன. இதில், சிஐடியு மாவட்டச் செய லாளர் பி.ஜீவா, அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கிருஷ்ணன், மத்திய, மாநில அரசு  மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவர் டி.பாஸ் கரன், காப்பீட்டு கழக சங்க நிர்வாகி கள்  ஏ.சங்கர், சி.பழனிச்சாமி, பி.மது சூதனரெட்டி, டி.ஞானசெல்வம் உட் பட பலர் கலந்து கொண்டனர்.