கோவை, மே 22-
பல்லடம் வட்டம், அனுப்பட்டியில் உள்ள கிஸ்ஹால் இரும்பாலையால் சுற்றுச்சூழல் பெரும் மாசு ஏற்படுத்துவதால், போராட்ட இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனை சந்தித்து பொதுமக்கள் அழைப்பு விடுத்தனர்.
பல்லடம், அனுப்பட்டியில் கிஸ்ஹால் இரும்பாலை செயல்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகள் பெரி தும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இவ்வா லையை தடை செய்ய வேண்டுமென அனுப் பட்டி ஊர்ப் பொதுமக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரு கின்றனர். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் பல்லடம் வட்டாட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இத னையடுத்து, ஆலை விரிவாக்கம் செய்வது தடுத்து நிறுத்தப்பட்டன. தற்போது இந்த ஆலை எவ்வித விதிமுறைகளையும் பின் பற்றாமல் உற்பத்தியை தொடர்ந்து வரு கிறது. அனுப்பட்டி மக்கள் கடந்த 65 நாட்க ளுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக, திங்களன்று கோவை, காந்திபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் போராட்டக்குழுவினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைக்கு எதிராக ஜூன் இரண்டாவது வாரத்தில் பெருந்திரள் மக் கள் போராட்டத்தை பல்லடத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக இந்த ஆலோசனைக்கூட் டத்தில், போராட்டக்குழுவினரோடு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன் றிய செயலாளர் வை.பழனிச்சாமி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.