போலி மது விற்பனை குறித்து தகவல் அளிக்க எண் அறிமுகம்
அவிநாசி, மே 29- சட்ட விரோதமாக சாராயம், போலி மது விற்பனை குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க கட் செவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவிநாசி காவல் துறை, மதுவிலக்கு போலீசார் சார்பில் சட்ட விரோதமாக சாராயம், மது விற்பனை குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கும் வகையில் 99620 10581 என்ற கட் செவி எண்ணை அறிமுகப்படுத்தி யுள்ளனர். இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு, கள்ள சாராயம், போலி மது, சட்ட விரோத மது விற்பனை ஆகியவை குறித்து தகவல் அளிக்கலாம் எனத் தெரிவித்துள் ளனர். இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக அறிவிப்பு பதாகைகள் அவிநாசி, சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த துண்டு பிரசுரத்தை ஞாயிறன்று அவிநாசி மது விலக்கு காவல் ஆய்வாளர் அனுராதா தலைமையிலான போலீசார் சேவூர் பகுதியில் பொதுமக்களுக்கு வழங் கினர்.
ஓடும் பேருந்தில் வழிப்பறி மூன்று பேர் கைது
திருப்பூர், மே 29 – திருப்பூரில் ஓடும் பேருந்தில் ரூ.65 ஆயிரம் வழிப்பறி செய்த இரு பெண்கள் உள்பட 3 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். திருப்பூர் மண்ணரையைச் சேர்ந்தவர் குப்புசாமி. பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார். இவர் சேலத்தில் இருந்து பேருந்தில் திருப்பூர் மண்ணரைக்கு வந்தார். அவர் கைப்பை யில் ரூ.65ஆயிரம் ரொக்கப்பணம் வைத்திருந்தார். மண் ணரை பேருந்து நிறுத்தத்தில் அவர் இறங்கிப் பார்த்தபோது பையில் இருந்த பணத்தை காணவில்லை. உடனடியாக திருப் பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். திருப்பூர் போலீசார் விரைந்து வந்த விசாரணையை துவக்கி னர். பேருந்தில் குப்புசாமிக்கு அருகே பக்கத்தில் இருக்கையில் இரு பெண்கள் பயணம் செய்தனர். இதனால் அவர்கள் திருடி இருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி துப்பு துலக்கினர். இதில் அதே பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த வாணி, வைதேகி மற்றும் சாய் ஆகியோர் இவரது கவனத்தை திசை திருப்பி பையில் இருந்த ரூ.65ஆயிரத்தை திருடியது தெரியந் தது. அவர்களிடமிருந்து ரூ.65ஆயிரத்தை போலீசார் பறி முதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:26.00/60அடி நீர்வரத்து:2கனஅடி
வெளியேற்றம்:27கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 64.14/90அடி.நீர்வரத்து:310கனஅடி
வெளியேற்றம்:13கனஅடி
அடுக்குமாடி குடியிருப்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை
கோவை, மே 29- தூய்மைப்பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் கோவை, புலியகுளம் மசால் லே-அவுட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி இவர்களை குடியமர்த்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் திங்களன்று, கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோவை, புலியகுளம் மசால் லே-அவுட் பகுதியில் 85 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மைப்பணியாளர்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வகைப் படுத்தி 122 குடும்பங்களுக்கு நில அளவை செய்து ஆவ ணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர குடிசை மாற்று வாரியம் தயா ராக உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையீடு செய்து மசால் லே-அவுட் பகுதி மக்க ளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட துணை செயலாளர் த.நாகராஜ் தலைமையில் திரளானோர் பங்கேற்று மனு அளித்தனர்.
மசூதி மீது குண்டு வீசுவதாக மிரட்டல் - ஒருவர் கைது
இளம்பிள்ளை, மே 29- சங்ககிரி அருகே மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசுவ தாக மிரட்டல் விடுத்த நபர்கைது செய்யப்பட்டார். சங்ககிரி அருகே உள்ள ஆர்.எஸ் பகுதியில் உள்ள மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசுவதாக கடந்த சனியன்று மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் ஒருவர் மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையி லிருந்து சங்ககிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள் ளனர். பின்னர், மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்து போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த போலீசாரின் விசாரணையில், சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தாசநாயக்கன் பாளையம், பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (38). இவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு பர்வீன்பானு என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அவரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து, சேர்ந்து வாழ மனைவியை அழைத்தாகவும் அதற்கு அவர் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதில், மனவிரக்தி அடைந்த அவர் சங்ககிரி ஆர்.எஸ்ஸில் உள்ள மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசினால் கலவரம் ஏற்படும் என மிரட்டியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் ஆலங்கட்டி மழை
கோவை, மே 29- தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் சிறுவர்கள் உற்சாகமடைந்தனர். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மதியம் மற்றும் மாலை வேலைகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதி களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மதியம் மற்றும் மாலை வேலைகளில் கனமழை பெய்து வருகிறது. இந் நிலையில், திங்களன்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது சிறிய அளவிலான ஐஸ்கட்டிகள் விழத் துவங்கியது. இந்த ஆலங்கட்டி மழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். குறிப்பாக சிறுவர்கள் ஐஸ் கட்டிகளை கைகளில் எடுத்து வைத்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து விளையாடி மகிழ்ந்தனர். கோவை, இடையர்பாளையம் பகுதியில் பல ஆண்டு களுக்கு பிறகு இவ்வாறு ஆலங்கட்டி மழை செய்வதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். கனமழையின் போது பலத்த சூறாவளி காற்று வீசியதால் செடிகள் மற்றும் மரங்கள் காற்றில் ஆடிய காட்சி பொதுமக்களிடையே கலக் கத்தை ஏற்படுத்தியது.
மூதாட்டியிடம் நகை பறிப்பு
கோவை, மே 29- குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல நடித்து மூதாட்டி யிடம் நகை பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை, சேரன்மாநகரை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (58). இவர் வீட்டின் முன்பு பூச்செடிகளை நடவு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த நபர் அவரிடம் முகவரி கேட்டுள்ளார். பின்னர், அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அந்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். உடனே ஆரோக்கியமேரியும் வீட்டுக்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்தார். இதையடுத்து அந்த நபர் தண்ணீரை வாங்கி குடித்தார். அதன்பின்னர், ஆரோக்கியமேரி வீட்டுக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற நபர் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆரோக்கிய மேரி சத்தம் போட்டார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் முடிய வில்லை. இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், நகையை பறித்து சென்ற நபர் ஏதேனும் தடயங் களை விட்டுச் சென்றுள்ளனரா? என்றும் சோதனை செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பகுதி வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை வசதி கேட்டு 16 ஆண்டுகளாக கோரிக்கை
உதகை, மே 29- கூடலூரில் சாலை வசதி கேட்டு 16 ஆண்டு காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருவது கவனத்திற்கு வந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் - தேவாலா மூச்சுக்கின்னு காட்டி மட்டம் செல்லக்கூடிய பகுதி உள்ளது. இங்கு கடந்த 16 ஆண்டு காலங்களாக சாலை வசதி இன்றி உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ஒரு மாணவனை பாம்பு கடித்தது. சாலை வசதி இல்லாத காரணத் தினால் அந்த மாணவனை நடக்க வைத்து கொண்டு செல்லப்பட்டதால் அவர் பாம்பின் விஷம் வேகமாக ஏறியதால் பரிதாபமாக உயிரிழிந்தார். அதுமட்டுமில்லாமல் இப் பகுதியில் 50 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகிறது. அவசர தேவைக்கு கூட இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர இயலாத நிலை உள்ளது. பலமுறை அரசு அதிகாரிகளும் இந்த இடத்தில் வந்து பார்வையிட்டு சாலை போட்டுத் தருவதாக சொல்கின்றனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவசர காலங்களில் எடுத்து செல்வதற்கு கூட தொட்டில் கட்டி செல்ல வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 16 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கின் றனர். உடனடியாக எங்கள் நியாமான கோரிக் கையின் மீது பரிசீலனை செய்து தீர்வு எட்டப் பட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியு றுத்தி உள்ளனர்.