கோவை, அக்.28- சந்திராயன் 3 மாணவர்கள் மத்தி யில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி யுள்ளது. எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, நானே அரசுப் பள்ளியில் படித்தவன்தான். மாண வர்கள் நிறைய ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட வேண்டும் என இஸ்ரோ விஞ் ஞானி வீரமுத்துவேல் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை, காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கல்வி குழும மாண வர்களுடன் சந்திராயன் - 3 குறித்து அதன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கலந் துரையாடினார். இதனை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், சந்திரயான் 3 மிஷன் முடிந்து விட்டது. சந்திராயன் தரையிரங்கிய பிறகு புழுதி ஒரு அச்சுறுத்தலாக இல்லை. இதுவரை யாரும் போகாத இடங்களில் சந்தி ராயன் இறக்கப்பட்டது. நிலவிற்கு மனிதர்களை அனுப்புவது என்பது நீண்டகால திட்டம். அதற்கான முன் னெடுப்புகள் எடுக்கப்பட்டு வரு கின்றது. நிலவிற்கு மனிதர்கள் போவ தற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. சந்திராயான் 3 தரையிரக்கம் என்பது மிகவும் மகிழ்வான ஒன்று. இஸ்ரோ வில் பல திட்டங்கள் தொடர்ந்து செயல் பாட்டில் இருக்கின்றது.படிப்பது மட்டுமே முக்கியம். கல்லூரியில் இருந்து வெளியே வரும் போது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சந்திராயன் திட்டத்தில் பணி யாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப் படவில்லை என்பது தவறான தகவல். விண்வெளி ஆராய்ச்சியில் பிறநாடு களுக்கு இணையாக நம்முடைய செயல்பாடு இருக்கின்றது. சந்திராயன் தென்துருவத்தில் இறக்கப்பட வில்லை. அதன் அருகில்தான் இறக் கப்பட்டுள்ளது. இதில் மறைக்க எதுவு மில்லை, மாணவர்கள் மத்தியில் விண் வெளி குறித்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், தனக்கும் இஸ்ரோவில் பணியாற்றுபவர்களுக்கும் நிறைய கடிதம் எழுதி இருக்கின்றனர். மாண வர்கள் சந்திராயன் குறித்து ஆர்வமாக துல்லியமாக கடிதம் எழுதி இருப்பது என்பது சந்தோஷமாக இருக்கின்றது. எந்த பள்ளியில் இருந்து படிக்கின் றோம் என்பது முக்கியமல்ல, மாண வர்கள் நிறைய ஆராய்ச்சி திட்டங் களை வகுக்க வேண்டும், ஏனென்றால் நானே அரசு பள்ளியில் இருந்து வந்த வன்தான் என தெரிவித்தார். விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்தார்.