மேட்டுப்பாளையம், ஏப்.10- மேட்டுப்பாளையத்தில் வன உயிரின பாதுகாப்பு மற்றும் யானைகள் வலசை செல்லும் பாதையில் உள்ள குறுக்கீடுகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லார் வனப் பகுதி கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரள வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய யானை வழித்தடப்பாதையாக கருதப்படு கிறது. நீலகிரி உயிர் சூழல் மண்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரின பாது காப்பு தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற் றும் சதீஷ்குமார் தலைமையிலான நீதிபதி கள் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள யானை களின் முக்கிய வழித்தட பாதையான கல் லார் வனப்பகுதி மற்றும் காட்டை ஊடு ருவி செல்லும் மேட்டுப்பாளையம் – உதகை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதி களில் ஆய்வு மேற்கொண்டனர். இதைய டுத்து யானைகள் தங்களது வழக்கமான வலசை பாதையில் இடையூறு ஏதுமின்றி கடந்து செல்ல எடுக்கப்பட்டு வரும் நடவ டிக்கைகள் குறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் நீதிபதிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தற்போது யானைகள் வழித்தடத்தில் குறுக்கிடும் மலை சார்ந்த நெடுஞ் சாலையை தவிர்த்து விட்டு வாகனங்கள் கடந்து செல்லும் வகையில், கல்லாரில் இருந்து இரண்டாவது கொண்டை ஊசி வளைவு வரை சுமார் 2.4 கிலோமீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட பாலம் கட்ட முதற் கட்டமாக ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கப் பட்டு ஆய்வு பணிகள் துவங்கவுள்ளதாக நீதி பதிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் இயற்கை சூழலை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் நடவ டிக்கைகள் மற்றும் நடைமுறை படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விவா திக்கப்பட்டது.