districts

img

சர்வதேச மகளிர் தினம்: உற்சாக கொண்டாட்டம்

நாமக்கல், மார்ச் 8- சர்வதேச 112 ஆவது மகளிர் தினம் உலக மெங்கிலும் பெரும் உற்சாகத்தோடும், உரிமை முழக்கத்தோடும் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் பேரெழுச்சி யோடு மகளிர் தினம் மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், சிஐடியு மற்றும் வர்க்க வெகுஜன சங்கங்களின் சார்பில் கொண்டாடப்பட்டது. சிஐடியு நாமக்கல் மாவட்ட குழு அலுவல கத்தில் சர்வதேச உழைக்கும் பெண்கள் தின  கருத்தரங்கம் நாமக்கல் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எல்.ஜெயக்கொடி தலைமை ஏற் றார். மாதர் சங்க துணை தலைவர் செல்வ ராணி வரவேற்புரையாற்றினார். உழைக்கும் பெண்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப் பினர் இரா.மாலதி சிறப்புரையாற்றினார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் ந. வேலுசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகே சன், மாதர் சங்க மாவட்ட தலைவர் ராணி, அங் கன்வாடி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாண்டிமாதேவி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.

கோவை

கோவையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் நடத்திய 112 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை தாமஸ் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற் றது. இக்கருத்தரங்கத்திற்கு, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் வி.ஆர்.சாந்தா மணி தலைமை ஏற்றார். கே.ஜானகி வரவேற் றார். மாவட்ட மகளிர் துணைக்குழு நிர்வாகி கள் என்.சாரதா, மாநில துணைத்தலைவர் என்.அரங்கநாதன், மாவட்ட தலைவர் எஸ். மதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.ஜோதிமணி உரையாற்றி னர். முடிவில் ஆர்.காந்திமதி நன்றி கூறினார். இதேபோன்று, கோவை மாவட்ட சிஐடியு  தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக  மக ளிர் தின விழா இன்ஜினியரிங் சங்கத்தில் கொண்டாட்டப்பட்டது. இதில், தையல் சங்க பொருளாளர் கு.லலிதா தலைமை ஏற்றார்.  இதில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநிலச் செயலா ளர் எம்.மகாலட்சுமி, மாவட்ட தலைவர் கே. மனோகரன், மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் மீ.உமாமகேஸ்வரி ஆகியோர் கருத்துரையாற்றினர்.  அன்னூர் அடுத்த கஞ்சப்பள்ளி ஊராட்சி யில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, ஊரக வேலை திட்ட  பணியாளர்கள் மற்றும் மக்கள் நல பணியா ளர்களுக்கு இனிப்புகளை, புதிய வேலைத் திட்ட அட்டைகளையும் வழங்கி தனது வாழ்த் துக்களை பரிமாறிக் கொண்டார்.  அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ஊரக வேலை  திட்ட பணியாளர்கள் மற்றும் மகளிர் மக்கள் நல பணியாளர்களுடன் இணைந்து நடன மாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த காட் சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

ஈரோடு

“உழைப்போர் யாவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம்” வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்கிற முழக்கத்தோடு ஈரோடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க அலுவ லக கூட்டரங்கில் கருத்தரங்கம் நடைபெற் றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க  தலைவர் பி.எஸ்.பிரசன்னா தலைமை ஏற் றார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக் குழுவின் இணை அமைப்பாளர் பி. ஸ்ரீதேவி வரவேற்றார். சிஐடியு மாநிலச் செய லாளர் எஸ்.தேவமணி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாநில உதவிச்செயலாளர் எம்.கிரிஜா, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ். சுப்ரமணியன், அஇவிதொச மாநிலச் செயலா ளர்  கே.சண்முகவள்ளி ஆகியோர் கருத்துரை யாற்றினர். முடிவில், தவிச மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஜெயக்கொடி நன்றி கூறினார்.