districts

img

சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்

அன்னூர், மார்ச் 9-

சர்வதேச மகளிர் தினம் திங்களன்று அன்னூர் உள்ளிட்ட கோவை மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் உற்சகமாக கொண்டாடப்பட்டது. அன்னூரில் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் சார்பில் திங்களன்று கூத்தாண்டவர் கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப் பினர் பாரதி, மாதர் சங்க நிர்வாகி நித்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பிஎஸ்என்எல், வளாகத் தில் உலக மகளிர் தின அமைப்பு விழா கொண்டாடப்பட்டது. இதில், பிஎஸ்என் எல் ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் விஜயேஸ்வரி, மாவட்ட பொறுப்பாளர் எஸ்.மனோகரன், ஓய்வூ தியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பி. தங்கமணி ஆகியோர் கலந்து கொண்ட னர். இதேபோல் கோவையில் பல்வேறு பகுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கோவை மாவட்ட தையல்  கலை ஞர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம், அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், ஏரா ளமான பெண்கள் கலந்து கொண்டனர். சேலம் சேலம் சோனா கல்வி குழுமத்தின் சார்பில் கல்லூரியின் தலைவர் வள்ளி யப்பா, சீதா வள்ளியப்பா ஆகியோர் தலைமையில் மகளிர் தினம் கொண்டா டப்பட்டது. இதில், கல்லூரியின் துணைத்  தலைவர்கள், அமெரிக்க யேல் பல்க லைக்கழக உளவியல் இணைப் பேராசி ரியர் ஜோன் குக், சோனா கல்வி குழும முதல்வர்கள், மாணவ, மாணவிகள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.