districts

img

வனத்தாவரங்கள் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கு

மேட்டுபாளையம், பிப். 2- காடுகளில் ஊடுறுவி வனச்சூழலை பாழாக்கி வரும் உன்னிச்செடிகளை அப்புறப்படுத்தும் திட்டம் குறித்த மாநில திட்டக்குழுவுடன் வனத்துறை மற்றும் தாவரவியல் வல்லுனர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.  வன எல்லைகளில் பரவி படர்ந்த வெளிநாட்டு உன்னிச்செடிகள் தற் போது அடர்ந்த வனத்திற்குள்ளும் ஊடுருவி இயற்கையான வனச்சூழலை  பெருமளவு பாழாக்கி வருகின்றன. கள்ளி, பார்த்தீனியம், சீமை கருவேலம்,  வேலண்டினா கேமாரா என்றழைக்கப் படும் ஒரு வகை காட்டாமணக்கு செடி கள் போன்ற வனங்களுக்கு தொடர் பில்லாத அயல் வகை உன்னிச்செடி கள் அதன் இயல்புடன் மிக வேகமாக காடுகளில் பரவி வருவதால் வனத் தினுள் காலம் காலமாக வளர்ந்து வந்த  மரவகைகள் மற்றும் செடிகள் அழிந்து  வருகின்றன. இதனால் காடுகளில் வாழும் காட்டுயிர்களின் இயல்பான  உணவு சங்கிலி துண்டிக்கப்படுவதோடு ஒட்டுமொத்த வனச்சூழலும் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த  பகுதி மண்ணுக்கேற்ற நாட்டு மரங் களின் வளர்ச்சியை தடுத்து மண் வளத்தை பாழாக்கும் வகையில் விஷம்  போல் பரவி வரும் உன்னிச்செடிகளை கட்டுப்படுத்த தொடர்ந்து கோரிக் கைகள் எழுப்பப்ட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வியாழனன்று  மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஏற் பாட்டில் வனங்களில் ஊடுருவும் மரத் தாவரங்கள் குறித்த சர்வதேச கருத் தரங்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள  தனியார் பூங்கா உள்ளரங்கில் நடை பெற்றது. இதில் மாநில திட்டக்குழுவின் தமிழ்நாடு நில பயன்பாட்டு ஆய்வு வாரியம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று உரை யாற்றினர். இக்கருத்தரங்கில் தமிழ்நாடு மட்டு மின்றி கேரளா, கர்நாடகா, உத்த ராஞ்சல், மகாராஷ்டிரா என ஐந்து  மாநில வனத்துறை அதிகாரிகள் கலந்து  கொண்டனர். கருத்தரங்கில் பேசிய  தமிழ்நாடு  தலைமை வனப்பாதுகா வலர் சுப்ரத் முஹபாத்ரா, திட்டக்குழு உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட் டோர் வனத்திற்குள் பரவும் உன்னிச் செடிகளால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள்  குறித்தும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பார்த்தீபன்  உள்ளிட்ட வன மரவியல் வல்லுனர்கள் அவற்றை அப்புறபடுத்தும் வழி வகைகள் குறித்தும் விரிவாக எடுத்து ரைத்தனர்.