districts

img

உழவர் நலத்துறை சார்பில் அடர் நடவு முறை பயிற்சி

சேலம், ஜன.21- தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் அடர் நடவு முறை  குறித்த பயிற்சி ஏற்காட்டில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் ஏற்காடு வட்டாரம் குண்டூர் பிர்காவில் தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு முறை விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. இதற்கு  வட்டார தொழிற்நுட்ப மேலாளர். சந்திர மோகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்திற்கு அட்மா திட்ட சேர்மன்  வி.தங்கசாமி தலைமை வகித்தார். இதில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பாக செந்தில்குமார் பயிர் அடவு முறை பற்றி எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் கோகிலா சித்தேஸ்வரன், சின்னத்தம்பி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.