districts

img

ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

ஈரோடு, ஜூன் 10- கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2 ஆவது நாளாக ட்ரோன் கேமிரா மூலம் வனத்துறையி னர் தேடி வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்தில் உள்ள 10 வனச்சரகங்களில், ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் வன விலங்கு கள் அருகே உள்ள கிராமத்திற்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் தாள வாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் இருந்து கடந்த 2 தினங்க ளுக்கு முன்பு ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து, அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது.  இதனால், அச்சமடைந்த விவசாயி கள் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இல்லையேல் அடர் வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ் நாடு மற்றும் கர்நாடக வனத்துறை யினர் 2 ட்ரோன் கேமரா மூலம் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இரண்டாவது நாளாக வெள்ளியன்று வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர். மேலும், 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத்துறையினர் புலியின் நட மாட்டத்தை கண்காணித்து வரு கின்றனர். விரைவில் அடர்ந்த வனப் பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவித்தனர்.