கோவை, ஜன.8- உருமாறிய கொரோனா பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோ தனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, நாட்டின் பல்வேறு பகுதி களிலும் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிக ரித்து வருகிறது. அண்டை மாநிலமான கேரளத் தில் தொடர்ந்து பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதி கரித்து வருவதால், கேரளத்தையொட்டி உள்ள தமிழக எல்லையான கோவை மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ஆகிய வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. கொரோனா பாதிப்பு வேகமாக அதிக ரித்து வருவதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகிலுள்ள சுகா தார மையம் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கோவை மாவட்டத்தில் சுகாதா ரத் துறை மூலம் 4 நடமாடும் காய்ச்சல் கண்டறி யும் குழுக்களும், 36 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.