districts

img

கோடை சீசன் நெருங்கிய நிலையில் மலர் நாற்று நடவு செய்யும் பணி தீவிரம்

உதகை, பிப்.18- கோடை சீசன் நெருங்கிய நிலை யில், உதகை தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்நாற்று நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுற்றுலா நகராமான உதகைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணி கள் வந்து செல்கின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பா லானவர்கள் அரசு தாவரவியல் பூங்கா விற்கு வருகின்றனர். அண்டை மாநில மான கேரளா மற்றும் கர்நாடகா மாநி லங்களில் இருந்தும் தினமும் பல ஆயி ரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தினமும் ஏராளமான சுற் றுலா பயணிகள் வருகின்றனர். இவர் களை மகிழ்விக்கும் பொருட்டு உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண் காட்சி நடத்தப்படுகிறது. மூன்று நாட் கள் முதல் ஐந்து நாட்கள் வரை நடை பெறும் இந்த கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிவர். கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண் காட்சி நடத்தப்படவில்லை. மேலும், கோடை விழாவும் நடத்தப்படவில்லை இந்நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள கோடை சீசனுக்காக தற்போது தாவ ரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. இம்முறை கொரோனா பாதிப்பு சற்று குறைந்து காணப்ப டுவதால், மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. மலர் கண் காட்சிக்காக தற்போது தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கடந்த மாதம் முதல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி கள் துவங்கப்பட்டுள்ளன. நாற்று கள் வளரும் காலத்தை பொறுத்து நடவு செய்யும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. மேலும், 35 ஆயி ரம் தொட்டிகளிலும் கடந்த மாதம் முதல் நாற்று நடவு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இரு மாதங்களுக்கு பிறகு பூக்கும் தாவரங்களை நடவு செய்யும் பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகி றது.