districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் 

கோவை, ஜன.25- இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்ல மறுத்த மாநக ராட்சி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய் யப்பட்டுள்ளார்.  கோவை மாநகர் கே.ஜி வீதியைச் சேர்ந்த மாநகராட்சி ஊழி யர் ஸ்ரீகாந்த் (57). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரி கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தில் நின்று  கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த  வாலிபர்,  ஸ்ரீகாந்திடம் தன்னை இருசக்கர வாகனத்தில்  வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். அதற்கு  ஸ்ரீகாந்த் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  பின்னர் வாலிபர், ஸ்ரீகாந்த்தை தகாத வார்த்தைகள் திட்டி கீழே தள்ளிவிட்டு சரமாரியாக  தாக்கினார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.  இதுகுறித்து ஸ்ரீகாந்த், வெரைட்டி ஹால் ரோடு போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அந்த வாலி பர் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (26) என்ப தும், அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய  வந்தது. இதை அடுத்து போலீசார் ரவிக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தின் முன்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

பவானி பகுதியில் அறுவடை பணி தீவிரம் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஈரோடு, ஜன.25- பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ள நிலையில், மயிலம்பாடியில்  நெல் கொள்முதல் நிலையம் புதனன்று திறக்கப்பட்டுள்ளது.  மேட்டூர் மேற்குக்கரை பாசனப் பகுதியில் பரவலாக அறுவடைப் பணிகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற் பனை செய்யும் வகையில் பூதப்பாடி ஒழுங்குமுறை விற்ப னைக்கூட வளாகத்தில் கடந்த வாரம் நேரடி நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு, சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத் தொகை சேர்த்து கிலோ ரூ.21.60க்கும், பொதுரக நெல் கிலோவுக்கு ரூ.21.15க்கும் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. வழக்கமாக இரு மையங்களும் ஒரே நாளில் திறக்கப்படும் நிலையில், பவானிக்கான நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொட்டி வைக்க இடமின்றியும், கொள்முதல் நிலை யம் திறந்த பின்னர் அறுவடைப் பணிகளை மேற்கொள்ள லாம் எனவும் விவசாயிகள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் வியாபாரிகள், விவசாயிகளின் தோட்டங்க ளுக்கு நேரில் சென்று நெல்லை அரசு வழங்கும் விலை யைக் காட்டிலும் குறைந்த விலைக்கு வாங்கிச் செல் கின்றனர். இதனால், விவசாயிகள் வருவாய் இழப்பு ஏற்படும்  நிலை ஏற்பட்டது. எனவே, பவானி மற்றும் சுற்றுவட்டார விவ சாயிகள் பயனடையும் வகையில் மயிலம்பாடியில் நேரடி  நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறக்க  வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். இதற்கிடையே  மயிலம்பாடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படு வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு 28 மின்னணு தராசுகள் பறிமுதல்

கோவை, ஜன.25- கோவை மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரி கள் ஆய்வில் 28 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்த னர்.  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில், சென்னை சட்ட முறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி அறிவுறுத்தலின்படி கோவை கூடுதல் தொழிலாளர் துறை ஆணையாளர் குமரன் வழிகாட்டுதலின்படி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுரையின் பேரில் கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வா ளர்கள், முத்திரை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கோவை பூ மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள  பூ, பழம் மற்றும் காய்கறி கடைகளில் ஆய்வு மேற்கொண்ட னர்.  இந்த ஆய்வில் 28 மின்னணு தராசுகளில் எடையளவு குறைப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டன.  இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, வணிகர்கள் மின் னணு தராசுகள், எடையளவுகளை சம்பந்தப்பட்ட முத்திரை  ஆய்வாளர் அலுவலகங்களுக்கு சென்று முத்திரையிட்டு கொள்ள வேண்டும். பயன்படுத்த முடியாத எடையளவுகளை  மாற்றி புதிய எடையளவுகளை பயன்படுத்த வேண்டும். மேலும் எடையளவுகளை உரிய காலத்தில் மறு முத்திரையிட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

சிதிலமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க கோரிக்கை

கோவை, ஜன.25- பொள்ளாச்சி கிராமங்களில் மழையால் சிதிலமடைந் துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குக்கிரா மங்கள் வழியாக செல்லும் சாலைகளை ஆராய்ந்து உருக் குலைந்துள்ள சாலைகளை போக்குவரத்து வசதிக்காக சீர மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை மூலம் அறிவுறுத்தப்பட் டுள்ளது. இதையடுத்து ஊராட்சி வாரியாக மக்கள் பயன் பாட்டுக்குள்ள  எந்த சாலைகள் மோசமாக உள்ளது என்பதை  கணிக்கிடும் பணி கடந்த சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு  நடைபெற்றது. அதன்படி பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை என 3  ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி பகுதிகளில் பொது நிதி, ஒன்றிய, மாநில நிதி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி என பல்வேறு திட்டங்கள் மூலம் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சில கிராமங்க ளில், சாலை வசதி ஏற்படுத்தி  கொடுக்கப்பட்ட சில மாதங்க ளில், அந்த சாலைகள் சிதிலமடைந்து போனதாக கூறப்படு கிறது. கிராமங்களில் அமைக்கப்படும் சாலைகளை, மழைக் காலத்திலும் பெயர்ந்து வராத வகையில் உறுதியாக அமைக் கப்படும் என்று பலரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இன்னும் சில கிராமங்கள் வழியாக செல்லும் கிளை சாலை பணிகள் கிடப்பில் போடப்படுவதாக கூறப்படுகிறது. இத னால், கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலையும், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பழுதாகும்  நிலையும் ஏற் பட்டுள்ளது. எனவே, கிராமங்களில் சேதமடைந்த ரோடுகளை முறையாக  சீர்படுத்தி மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

வழக்கறிஞரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி

கோவை, ஜன.25- கோவை வழக்கறிஞரிடம், நவீன சமைய லறை அமைப்பதாக கூறி ரூ.2.50 மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த வழக்கறிஞர் சாதிக் அலி (60). இவர் கோவை, சாய்பாபா காலனி காவல் நிலை யத்தில் புகார் மனு அளித்தார்.  அம்மனுவில் கூறியிருப்பதாவது, எனது வீட்டில் நவீன சமையலறை (மாடுலர் கிச்சன்) அமைக்க முடிவு செய்தேன். அப்போது எனது நண்பர் ஒருவர் மூலமாக சாய்பாபா காலனி, என்எஸ்ஆர் சாலையை சேர்ந்த லிங்கராஜ்  (40) என்பவர் அறிமுகமானார். அவர் என்னி டம் நவீன சமையலறை அமைப்பதற்கு ரூ.2.50 லட்சம் செலவாகும் என தெரிவித்தார். இத னைத்தொடர்ந்து, நான் ரூ.2.50 லட்சத்தை லிங் கராஜுடம் கொடுத்தேன். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட லிங்கராஜ் நீண்ட நாட்கள் ஆகியும் நவீன சமையறை அமைத்து கொடுக்கவில்லை. மேலும் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். நான் பல முறை  கேட்டும் பணத்தை அவர் திருப்பி கொடுக்க வில்லை. என்னிடம் பணத்தை பெற்று ஏமாற் றிய லிங்கராஜ் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்று தர வேண் டும். இவ்வாறு அம்மனுவில் அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து சாய்பாபா காலனி போலீசார் லிங்கராஜ் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு முகாம்

உதகை, ஜன.25- நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் குன்னூர் தலைமை தபால் நிலையம், உதகை மார்க் கெட், எமரால்டு, இந்துநகர், அருவங்காடு, வெலிங்டன்  கோத்தகிரி கூடலூர் பஜார்  மற்றும் மேலூரிலுள்ள தபால் நிலையங்களில்  ஜன.28 ஆம் தேதியன்று (சனியன்று) ஆதார் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில், புகைப்படம் மாற்றம், விரல் ரேகை, கருவிழி புதுப்பித் தல், பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவை புதுப்பித் தல் சேவைகளை பெற்று பய னடையலாம் என தபால் துறை கோட்ட கண்காணிப் பாளர் தெரிவித்துள்ளார்.

காந்தல்: ரூ.1.35 கோடியில் அறிவுசார் மையம் கட்டிடப் பணிகள் தீவிரம்

உதகை, ஜன.25- உதகையை அடுத்த காந்தல் பகுதியில், போட்டி தேர்வு களுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்  கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கல்வியுடன் சேர்த்து பொது அறிவை வளர்த்து கொள்ளும்  வகையில், மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி நடத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர நான்  முதல்வன் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி  பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் புத்தகங்கள் வாசிப்பதன்  மூலம் அறிவை வளர்த்து கொள்ளும் வகையிலும், சிவில் சர்வீஸ், டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வு களுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வசதிக்காக  கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து  மாவட்டங்களிலும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப் படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனடிப்படையில் உதகை நகராட்சி, காந்தல் பகுதியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டிடம் கட்ட 2021-22 ஆம் ஆண்டுக்கான கேஎன்எம்டி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நிலம் தேர்வு செய்யப்பட்டு, மண் உறுதி தன்மை பரிசோதிக்கப்பட்டு நிலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கிய கட்டுமான பணிகள், பருவமழை காரண மாக மெதுவாக நடைபெற்று வந்தது. தற்போது மழை முடிந்து வெயிலான காலநிலை நிலவி வரும் நிலையில் கட்டுமான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் கட்டுமான பணிகள் அனைத்தும் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூதாடிய 4 பேர் கைது

பென்னாகரம், ஜன.25- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஏரியூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் மாரி தலைமையிலான போலீசார் சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருந்த நாகராஜ் (55), வெங்கடேசன் (38), சிலம்ப ரசன் (33), சின்ன கண்ணு (60)  ஆகிய நான்கு பேரை மீது வழக்கு பதிவு செய்து கைது  செய்தனர்.இவர்களிட மிருந்து 1050 ருபாயும், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

100 நாள் வேலைக்கு சம்பள எங்கே?

அஇவிதொச கண்டனம்

ஈரோடு, ஜன. 25- கிராமப்புற வேலை உறுதி சட்டப்பணிகளுக்கு ஊதியம்  வழங்கப்படாமல் இருப்பதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று ஈரோட்டில்  நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.விஜயராகவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.சண்முக வள்ளி, பொருளாளர் எஸ்.மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப்படி பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதிக்குப் பிறகு கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப் படவில்லை. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந் நிலையைப் போக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முறை யிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை: 10 கவுன்சிலர்களுக்கு இன்று விருது

கோவை, ஜன.25- குடியரசு தின விழாவில் கோவை மாமன்ற உறுப்பினர்கள் 10 பேருக்கு, மாநகராட்சி மேயர் “சிறந்த கவுன்சிலர் விருது” வழங்க உள்ளார். இந்திய நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா கோவை வஉசி மைதானத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதில் பொதுமக்க ளுக்கு ஆற்றும் சேவைகளை பாராட்டும் வகையில், கோவை மாநகராட்சியில் 2022-23  ஆம் ஆண்டுக்கான சிறந்த கவுன்சிலர்களை தேர்வு செய்து, “சிறந்த கவுன்சிலர் விருது” வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனடிப் படையில் கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வருகை, கூட்டத்தில் ஆக்கபூர்வமான ஆலோ சனை வழங்குதல், நமக்கு நாமே திட்டத்திற் கான பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கத்தில் பங்களிப்பு, பொது ஒதுக்கீட்டு இடம் மீட்பு மற்றும் பராமரிப்பு பணியில் பங்களிப்பு, வரிவசூலிப்பு பணி களில் பங்களிப்பு, பொதுமக்களிடையே நன் மதிப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கவுன்சி லர்களின் செயல்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு 10  கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கோவை மாமன்ற உறுப்பினர் கள் ஜி.வி.நவீன்குமார் (5 ஆவது வார்டு), ஆ. ராதா கிருஷ்ணன் (18 ஆவது வார்டு), செ. சரண்யா (30 ஆவது வார்டு), எம்.கே.பிரவீன் ராஜ் (42 ஆவது வார்டு), பிரபா ரவீந்திரன் (48  ஆவது வார்டு), ஏ.அன்னக்கொடி (49 ஆவது  வார்டு), இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்  (52 ஆவது வார்டு), கே.கார்த்திக் செல்வராஜ்  (72 ஆவது வார்டு), இ.அகமது கபீர் (86  ஆவது வார்டு), ரா.கார்த்திகேயன் (100 ஆவது வார்டு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். இவர்களுக்கு மேயார் கல்பனா ஆனந்த் குமார் விருதுகளை வழங்குகிறார்.

சிறுத்தை தாக்கி தொழிலாளி காயம்

உதகை, ஜன.25- கோத்தகிரி பகுதியில் அண்மை காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடி, சிறுத்தை, காட்டெ ருமை போன்ற வன விலங்கு கள் உணவு, மற்றும் தண்ணீ ருக்காக குடியிருப்பு பகுதி யில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ள னர். இந்நிலையில், கோத்த கிரி டேன் டீ குடியிருப்பைச் சேர்ந்த டேன் டீ ஊழியர் பன்னீர்செல்வம் புதனன்று,  காலை கடனை கழிப்பதற் காக வெளியே சென்றுள் ளார். அப்போது புதரில்  மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, பன்னீர்செல்வத்தை  தாக்கியது. அப்போது அவரது அலறல் சப்தம்  கேட்ட குடியிருப்பு மக்கள்,  காயமடைந்திருந்த பன்னீர் செல்வத்தை மீட்டு, மருத்து வமனைக்கு அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.