தருமபுரி, ஜூலை 14- காரிமங்கலம் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 16 ஆம் தேதி மாற் றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தரு மபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவ தற்காக மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் மாவட் டம் முழுவதும் நடைபெற வுள்ளது. காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற் றுத்திறனாளிகள் பயன்பெ றும் வகையில் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் வரும் சனி யன்று (ஜூலை 16) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றுத்திற னாளி களுக்கான ஒருங்கி ணைந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், இதுநாள் வரை மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டை பெறாத மாற் றுத்திறனாளி களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத் திற னாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்தல். தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்கு வதற்காக பதிவு செய்தல். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் மான்யம், உதவி உப கரணங்கள், வருவாய்த் துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான உத வித்தொகை வழங்குதல். இலவச வீட்டு மனை பட்டா போன்ற பல்வேறு திட்டங் களில் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள், கோரிக்கை மனுக்கள் பெறும் பொருட்டு, பல்வேறு துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நடை பெறவுள்ளது. எனவே, மாற்றுத்திற னாளிகளுக்கான ஒருங்கி ணைந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறு மாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.