districts

img

விபத்து நிவாரணமாக ரூ.5 லட்சத்திற்கு காப்பீடு செய்க

தருமபுரி, ஜூலை 18- கட்டுமானத் தொழிலாளர்களின் விபத்து நிவாரணமாக ரூ.5 லட்சத்திற்கு காப்பீடு செய்யுமாறு வலியுறுத்தி செவ் வாயன்று தமிழ்நாடு முழுவதும் சிஐ டியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால சிறப்பு நிதி யாக ரூ.5 ஆயிரம் மற்றும் தரமான வேட்டி, சேலை வழங்க வேண்டும். நல வாரியத்தில் நேரடிப் பதிவை அனும திக்க வேண்டும். கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம்  வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய் வூதியம் வழங்க வேண்டும். விபத்து  நிவாரணமாக ரூ.5 லட்சத்திற்கும், விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சத்திற்கும் காப் பீடு செய்வதை உறுதிப்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தருமபுரி நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சி.சண்முகம் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் சி.கலா வதி கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகரா சன், மாவட்ட செயலாளர் பி.ஜீவா ஆகி யோர் சிறப்புறையாற்றினர். இதில், சங் கத்தின் நிர்வாகிகளான சி.ராஜா, கே. விக்ரம், பி.பழனி, ஜி.பெருமாள், எம். முருகேசன், கே.ரங்கநாயகி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், மாவட்ட பொருளாளர் ஜி.செல்ராஜ் நன்றி கூறினார்.   

கோவை

கோவை, ராமநாதபுரம் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.முருகையா தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட  தலைவர் கே.மனோகரன், செயலாளர்  எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர்  ஆர்.வேலுசாமி ஆகியோர் உரையாற் றினர். இதில், பொதுத்தொழிலாளர்கள் சங்க பஞ்சலிங்கம், மாநகர பொது  தொழிலாளர்கள் சங்க நவநீதகிருஷ் ணன், கைத்தறி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால், வடக்கு பொதுத்தொழிலாளர் சங்க கேசவ மணி உள்ளிட்ட திரளான கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். 

ஈரோடு

இதேபோன்று, ஈரோட்டில் நலவா ரிய அலுவலகம் முன்பு சிஐடியு கட்டு மான தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எச். ஸ்ரீராம் தலைமை ஏற்றார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், துணைத்தலைவர் என்.முருகையா, கட் டுமான சங்கச் செயலாளர் எஸ்.மாத வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொருளாளர் கே.பழனிசாமி உள்ளிட் டோர் உரையாற்றனிர். இதில், சங்கத் தின் நிர்வாகிகள் சி.கே.முருகேசன், ஆர்.நடராஜ், ஆர்.சரோஜா, ஏ.கே.சீனி வாசன், ஆர்.நடேசன், ஏ.பி.மாதவன், துணைச்செயலாளர்கள் பி.தீபா, சி. பெருமாள் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். 

சேலம்

சேலத்தில், சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் சி.மயில்வேலன் தலைமை ஏற்றார். சிஐடியு மாநில துணைத்தலை வர் ஆர்.வெங்கடாபதி, சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் எஸ். கே. தியாகரா ஜன், மாவட்ட தலைவர் டி.உதயகுமார், மாவட்ட செயலாளர் எ.கோவிந்தன், கட்டுமான தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் சி.மோகன், கட்டு மான சங்க மாவட்ட செயலாளர் சி.கருப் பண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இதில், திரளானோர் கலந்து கொண்ட னர்.