சேலம், ஆக 24- அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் சேலம் கோட்ட 34ஆவது ஆண்டு பொது மாநாடு மற்றும் பொதுக் குழு கூட்டம் சேலம் ஐந்து ரோடு பகுதி யில் உள்ள குஜராத்தி மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொருளா ளர் பி.எஸ்.ரவி துவக்கிவைத்து உரை யாற்றினார். இரண்டு நாட்கள் நடைபெ றும் இம்மாநாட்டில் பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியினை முற்றிலுமாக விளக்கி இன்சூரன்ஸ் பரவலாகத்திற்கு வழி வகுக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை மத்திய அரசாங்கம் மேலும் விற்பனை செய்யக்கூடாது, சட்டமன்றம் நாடாளு மன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்ப டுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு எதிராக அமைந்திருக்கும் புதிய தொழி லாளர் நலச் சட்டங்களை மீண்டும் மாற்றி அமைக்க கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் தென் மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆர்.தர்மலிங்கம், செயற்குழு உறுப்பினர் எம்.கே.கலைச்செல்வி, அதிகாரிகள் சங்க கோட்டச் செயலாளர் பி.அங்கன்ன வெங்கடேஷ், தேசிய இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் களப்ப ணியாளர்கள் சம்மேளனம் பொதுச் செயலாளர் ஜி. சிவக்குமார் உள்ளிட் டோர் பங்கேற்று வாழ்த்தி உரையாற்றி னர்.