districts

உள்ளாட்சிகளில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்டக் கூலி வழங்க நிர்வாகங்களுக்கு தொழிலாளர் துறை உதவி ஆணையர் அறிவுறுத்தல்

திருப்பூர், ஜூன் 25 - சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்  வழங்கக் கோரி இம்மாத இறுதியில் வேலை  நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்  போவதாக சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர் சங்கம் அறிவித்திருந் தது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட தொழி லாளர் துறை உதவி ஆணையர் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளாட்சி நிர்வாகங்கள் சட்ட ஊதியம் வழங்குவது குறித்து நடவ டிக்கை எடுக்க அறிவுறுத்தினார். திருப்பூர் மாவட்ட நகர்ப்புற, கிராமப்புற  உள்ளாட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் 12 ஆயிரம் தொழிலா ளர்களுக்கு, நீதிமன்றம் பிறப்பித்த உத்தர வின் அடிப்படையில் சட்டப்படி நிர்ணயிக்கப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்று சிஐ டியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தும் கடந்த 22 மாதங் களாக சட்டப்படியான ஊதியத்தை ஒப்பந்த தாரர்கள் வழங்கவில்லை. இது குறித்து மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட் சிகள் உள்ளிட்ட  நிர்வாகங்களும் ஒப்பந்ததா ரர்களை வலியுறுத்தி உரிய தலையீடு செய்ய வில்லை. எனவே சட்டப்படி நிர்ணயித்த ஊதி யத்தை வழங்க வலியுறுத்தி இம்மாதம் 27 ஆம் தேதிக்குப் பிறகு வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என்று சிஐடியு அனைத்து உள்ளாட்சி அமைப் புகளுக்கும் வேலை நிறுத்த அறிவிப்பு நோட் டீஸை கடந்த 12ஆம் தேதி அனுப்பியது. இந்த  நிலையில் திருப்பூர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (சமரசம்) பிரேமா அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும், சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்  சங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடத்திட அழைப்பு விடுத்தார். இதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் துறை  அலுவலகத்தில் புதன்கிழமை உதவி ஆணை யர் பிரேமா முன்னிலையில் பேச்சுவார்த்தை  நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளின் சார்பில் அதி காரிகள் கலந்து கொண்டனர். சிஐடியு ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐ டியு மாவட்ட உதவித் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், சங்கப் பொருளாளர் ஈஸ்வரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். இப்பேச்சுவார்த்தையில் உள்ளாட்சி அமைப்புகள் ஒப்பந்தம் விடும்போதே தொழி லாளர்களுக்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட தின ஊதியம் வழங்க வேண்டும், பி.எப்., பிடித் தம் செய்வதுடன், முறையாக பி.எப்.கணக் கில் நிர்வாகத்தின் பங்குத் தொகையுடன் செலுத்தி ரசீது வழங்க வேண்டும். ஊதியம்  வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்து 22 மாதங்கள்  ஆகிறது. இதை நடைமுறைப்படுத்தாததால் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டு உள்ளது என்று சிஐ டியு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதேசமயம் உள்ளாட்சி நிர்வாகங்கள் தரப்பில், ஒப்பந்ததாரர்களிடம் பேசி பதில ளிப்பதாகக் கூறியுள்ளனர். தொழிலாளர் துறை உதவி ஆணையர் பிரேமா, உள்ளாட்சி  நிர்வாகங்கள் சட்டப்படி உரிய ஊதியத்தை  வழங்குவதற்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டி ருக்கும் நிலையில் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அத்துடன் சிஐடியு நிர்வாகிகளிடம்,  கால  அவகாசம் கொடுத்து போராட்டம் நடத்துவ தில் ஒத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்  கொண்டார். எனினும் சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் கலந்து பேசி  விட்டு பின்னர் தங்கள் முடிவைத் தெரிவிப் பதாக சிஐடியு செயலாளர் கே.ரங்கராஜ் கூறி னார். இக்கூட்டத்தில் முடிவு ஏற்படாத நிலை யில் அடுத்தக்கட்டமாக ஜூலை இரண்டா வது வாரத்திற்கு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.