districts

img

நீதிமன்றங்களில் சட்ட நூலகங்களை வலுப்படுத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

திருப்பூர், மே 27– நீதிமன்றங்களில் சட்ட நூலகங்களை வலுப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் - மங்கலம் சாலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.5.5 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் புதிய கட்டிடம், நீதித்துறை அலுவலர்கள் குடியிருப்பு கட்டும் பணி தொடங்கி தற் போது நிறைவடைந்தது. இதனை சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி வெள்ளியன்று திறந்து வைத் தார். இதனுடன், காணொலி வாயிலாக உடு மலைப்பேட்டை கூடுதல் மாவட்ட நீதிமன்ற மும் திறந்து வைக்கப்பட்டது. அப்போது நீதிபதி முனீஸ்வர் நாத் பண் டாரி பேசியதாவது, இந்தியாவிலேயே வழக் குகளை விரைந்து முடிப்பதில், சென்னை  உயர்நீதிமன்றம் முன்னோடியாக உள்ளது. அதே போல், மாவட்ட நீதிமன்றங்களும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். நீதிமன்றங்களின் அடிப்படை கட்டமைப்புக ளுக்கு மாநில அரசு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பாக செயல்பட முக்கியக் காரணம் உட்கட்டமைப்பு மற்றும் நீதித் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட்டதும் தான்.  ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வழக் கும் சட்ட அறிவை, வளர்த்துக்கொள்ளும் களமாக உள்ளது. பார் அசோசியேசன் சட்ட நூலகங்களை நீதிமன்றங்களில் வலுப்ப டுத்த வேண்டும். இதன்மூலம் இன்றைய இளம் வழக்கறிஞர்கள் முழு பயன் பெறுவர். குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வரும் நபர்களுக்கு உரிய உதவிகளையும், தகுந்த  ஆலோசனையும் வழங்க வேண்டும். வெறு மனே வழக்குகளை முடித்து வைக்கும் இட மாக குடும்ப நல நீதிமன்றங்கள் இருக்க கூடாது. குடும்ப நல ஆலோசகர்கள் மூலம் உரிய தீர்வு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

சட்ட அமைச்சர் ரகுபதி

முன்னதாக, தமிழக சட்டத்துறை  அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், நீதித் துறை சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற அக்கறை உள்ளவராக தமிழக முதல்வர்  இருப்பதால், பல்வேறு இடங்களில் கூடுத லாக நீதிமன்றங்கள் அமைக்கப்படுகிறது.  வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ. 7  லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாகவும் முதல் வர் உயர்த்தி உள்ளார். உடுமலை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திறந்திருப்பதன் மூலம், அங்கிருந்து வழக்குகளுக்காக தாராபுரம், திருப்பூர் சென்று வந்தவர்கள், இனி அந்த பகுதியிலேயே வழக்குகளை நடத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு நேர விரயம் இருக்காது. நீதி நிர்வாகம் சரியாக இருந் தால் தான், ஆட்சி நிர்வாகம் சரியாக இருக் கும் என்று முதல்வர் நினைக்கிறார். அனைத் தும் சிறப்பாக இருந்தால் தான் அது சிறந்த ஜனநாயகமாக இருக்கும் என்றார். முன்னதாக திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் வரவேற்றார். இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், பி.டி.ஆஷா, ஓய்வுபெற்ற நீதிபதி கே.கல்யாணசுந்தரம், ஆதிதிராவி டர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ், மாவட்ட ஆட்சியர் சு.வினீத், மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் மற் றும் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக,  திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதி பதி வி.புகழேந்தி நன்றி கூறினார்.