பணியிடங்களில் பாலியல் தடுப்பு குழு ஆட்சியர் அறிவுறுத்தல்
ஈரோடு, டிச. 28- பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டப்படி தடுப்பு, தடை மற்றும் தீர்வு குழுக்கள் அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு துறை மற்றும் தனியார் சார்ந்த அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற் சாலைகள், பயிற்சி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள் விற்பனை கூடங் களில் 10-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட பணியிடங்களில் 4 நபர்கள் கொண்ட ஒரு உள்ளக குழு அமைக்க வேண்டும். இதுகுறித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் உள்ளக குழு அமைக்கப்பட்ட விவரம் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக 6ஆவது தளத் தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலரை அணுகு மாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுன்னி தெரிவித் துள்ளார்.
கோவை: ஊதிய உயர்வு வழங்கக்கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மனு
கோவை, டிச.28- தமிழக அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிரதி நிதிகள் சம்பள உயர்வு மற்றும் அரசானை M S 173 ரத்து செய்வது அல்லது தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சின்கோனாவில் உள்ள லாசன் தேயிலை தோட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தேயிலை தோட்ட தொழிலாளர் களாக மூன்று தலைமுறைகளாக அதேபகுதியில் வசித்து பணியாற்றி வருகின்றனர். மிக குறைந்த ஊதியத்திற்கு பணி யாற்றி வரும் இத்தொழிலாளிகளுக்கு, சம்பள உயர்வு ரூ. 425.40 என அரசு அறிவித்ததது. இதை அரசு மற்றும் டான் டீ நிர்வாகம் வழங்காமல் வைத்துள்ளது. அதனை உடனடி யாக வழங்க வேண்டும். குறிப்பிட்ட தேயிலை தோட்ட பகுதி யினை தமிழக அரசு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப் படும் என அறிவித்துள்ளது. இதன்காரணமாக தொழிலாளர் கள் விருப்ப ஓய்வு எழுதிக்கொடுக்கும் படியும் கேட்டது. ஆனால், இதுவரை ஊதிய உயர்வு, விருப்ப ஓய்வு இரண்டு கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டுள்ளது. மேலும், டான் டீ தேயிலை தோட்டத்தை வனத்துறை யினரிடம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத் துள்ளது. தொழிலாளர்கள் இதே தோட்ட பகுதியில் காலம் காலமாக வசித்து வருவதால், இழப்பீடு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். அல்லது செயல்படும் காலத்தில் ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.
தொலைந்து போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ஈரோடு, டிச. 28- ஈரோடு மாவட்டத்தில் தொலைந்து போன செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு தாரர்கள் தங்களது செல்போன் தொலைந்துவிட்டதாக பல் வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மனுதாரர்களிடம் செல்போன் தொலைந்த தேதி, இடம் மற்றும் இதர விபரங்கள் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சைபர் செல் பிரிவின் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ரூ.8 லட்சத்து 15 ஆயிரத்து 996 மதிப்புள்ள 55 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. கைப் பற்றப்பட்ட செல்போன்கள் செவ்வாயன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனுதாரர்கள் வசம் காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் வழங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், குழந்தைகள் மற்றும் பெண் களுக்கெதிரான குற்றப்பிரிவு மற்றும் சைபர் குற்றப்பிரிவு ஆகியோர் உடனிருந்தனர். இவ்வருடத்தில் இதுவரை ரூ.77 லட்சத்து 86 ஆயிரத்து 444 மதிப்புள்ள 528 செல்போன்கள் மீட்கப்பட்டு சம்மந்தப் பட்ட மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி காண்டிராக்டர் கடத்தல்: 3 பேர் கைது
கோவை, டிச.28- அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி பணமோசடியில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரை கடத்தி சென்று பணம் பறிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய் தனர். கோவை மாவட்டம், சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையம், அனீஸ் கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் கட்டிட ஒப்பந்ததாரர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலை யில், மணிகண்டன் கோவைப்புதூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அவரது மனைவி மகேஸ்வரி வீட்டில் தனி யாக இருக்கும்போது, பெண் உட்பட 5 பேர் கொண்ட கும்பல், மகேஸ்வரியிடம் அவரது கணவரை பற்றி விசாரித்து மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, உடனடியாக தனது கணவர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். இதன்பின் வீட்டிற்கு மணிகண்டன் வந்ததும், அடையாளம் தெரியாத அந்த கும்பல் 2 பேரின் செல்போனையும் பறித்து சுவிட்ச் ஆப் செய்தனர். இதன்பின் 5 பேரும் சேர்ந்து, மணிகண்டனை காரில் கடத்திச்சென்று, காரைக்காலிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள ஒரு விடுதியில் அடைத்து வைத்தனர். அங்கு அவரை அடித்து, உதைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். உடனே மணிகண்டன் அவரது வங்கிக்கணக்கிலிருந்து, அடை யாளம் தெரியாத அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சத்தை பரிமாற்றம் செய் தார். மேலும், பத்திரத்தில் ரூ.15 லட்சத்திற்கு கையெழுத்து வாங்கிக் கொண்டனர். இதன் பின் மணிகண்டனை விடுவித்தனர். இச் சம்பவம் குறித்து மணிகண்டன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில், காவல் துறையினர் நடத்திய விசார ணையில், மணிகண்டனை வனிதா என்ற பெண் 4 பேருடன் சேர்ந்து கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குற்றவாளி களை தேடி வந்தனர். இந்நிலையில், மணி கண்டனை கடத்தி பணம் பறித்த மதுக் கரையைச் சேர்ந்த வனிதா, சீர்காழியைச் சேர்ந்த முருகன், முருகனின் உறவினர் ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணை யில் போலீசாரிடம் அவர்கள் கூறுகையில், மணிகண்டன், முருகனின் உறவினர்களுக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி அவர்களும் பல லட்ச ரூபாய் பணத்தை மணிகண்டனிடம் கொடுத்தனர். ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் இழுத்தடித்து வந்தார். இதனால், நாங்கள் அவரை காரில் கடத்தி பணத்தை பறித்தோம் என்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் தொல்லை: இளைஞருக்கு சிறை
ஈரோடு, டிச. 28- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், குத்தியாலத்தூர் அருகே காடகநல்லி பகுதியைச் சோ்ந்தவா் ஜடேபந்தப்பன் மகன் காா்த்திக் (22). இவா், ஈரோடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் கைப் பேசி செயலி மூலம் பழகி யுள்ளார். சிறுமியைக் காத லிப்பதாகக் கூறி ஆபாச புகைப்படங்களை பெற் ள்ளார். இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித் தனர். ஈரோடு மகளிா் நீதி மன்ற நீதிபதி மாலதி முன்னி லையில் நடந்தது. செவ்வா யன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்கிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:49.44/60அடி
நீர்வரத்து:186கன அடி
வெளியேற்றம்:27கன அடி
மழையளவு:7மிமீ
அமராவதி அணை
நீர்மட்டம்: 89.67/90அடி.
நீர்வரத்து:631கனஅடி
வெளியேற்றம்:251கன அடி
மழையளவு:8மிமீ
அனுப்பர்பாளையத்தில் சிக்னல்: சிபிஎம் கோரிக்கை
திருப்பூர், டிச.28 - திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளை யம் பேருந்து நிலையம் பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்து நேரிடுவதால் அங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுப்பர்பாளையம் கிளைகள் சார்பில் இப்ப குதி பொதுமக்கள் கையொப்பமிட்ட மனு புதன்கிழமை காலை மாநகராட்சி முதலாம் மண்டலத் தலைவர் உமா மகேஸ்வரியிடம் அளிக்கப்பட்டது. இதில் குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடை பதிக்க தோண்டப்பட்ட சாலைக ளைச் செப்பனிட வேண்டும், தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வரு வதை வாரம் ஒரு முறை குடிநீர் கிடைக்கும் படி விநியோகம் செய்ய வேண்டும், அனுப் பர்பாளையம், காந்திரோடு மேற்கு பகுதி யில் 10 வீதிகளுக்கும் மாநகராட்சி மூலம் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும், சாக்கடைகளைத் தூர்வாரி வாரம் மூன்று முறை கொசு மருந்து தெளிக்க வேண்டும், அவிநாசி சாலையை நெடுஞ்சாலை துறை யினர் அகலப்படுத்த பாரபட்சமில்லாமல் செயல்படுவதுடன் முன்கூட்டியே அறிவிப்பு தர வேண்டும், அனுப்பூர்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடு வதைத் தடுக்க போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலா ளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பி னர்கள் அ.ஆறுமுகம், பி.சின்னச்சாமி, அனுப் பர்பாளையம் கிளைச் செயலாளர் ஏ.முத்துக் குமார், சிஐடியு நிர்வாகிகள் என்.குபேந்தி ரன், கலாதரன், எம்.பாண்டியராஜன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் கற்றல் பணியினை பாதிக்கும் வேலைகளை கைவிட வலியுறுத்தல்
தாராபுரம், டிச. 28- ஆசிரியர் கற்றல் பணியினை பாதிக்கும் வேலைகளை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட் டது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் தாரா புரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனி யார் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா.ராஜ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் ஆணை களை விலைபேசி விற்பனை செய்து வரும் பள்ளிக்கல்விதுறையை கண்டிப்பதோடு, இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்தவேண் டும். ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை பாதிக்கும் இணையப்பதிவு, பிஎல்ஓ உள் ளிட்ட பணிகளை கொடுக்ககூடாது. இடை நிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அ. பிரபு செபாஸ்டியன், பொருளாளர் பா.ஜெய லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் ப. கனகராஜா, மாவட்ட துணை தலைவர் நா. ராமமூர்த்தி மற்றும் வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பருத்தி விலை சரிவு விவசாயிகள் வேதனை
திருப்பூர், டிச. 28 - திருப்பூர் மாவட்டம் அவி நாசி வேளாண் விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.1200 குறைந்தது. அவிநாசி பருத்தி சந்தை யில் 950.80 குவிண்டால் பருத்தி ரூ.59.79 லட்சத் துக்கு ஏலம் போனது. குவிண் டாலுக்கு ரூ.1200 வரை விலை சரிந்ததால் பருத்தி விவசாயி கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பேருந்து கவிழ்ந்து 34 பேர் படுகாயம்
கோவை, டிச.28- சூலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 34 பேர் படுகாய மடைந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்து, செவ்வாயன்று இரவு 9 மணியள வில் 38 பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் ஷியாம் மற்றும் கூடுதல் ஓட்டுநர் ஆனந்த் ஆகியோர் ஓட்டி வந்தனர். இதனிடையே புதனன்று நள்ளிரவில் கோவை, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல் அண்ட் டி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த நிலையில், வளை வில் திரும்பியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது புறத்தில் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் பேருந்து திடீரென கவிழ்ந்ததால், படுகாயமடைந்து அலறி னர். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் படுகாய மடைந்து உயிருக்கு போராடிய பயணிகளை மீட்டனர். இதன்பின் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்கள் உட்பட 34 பயணிகள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இவ்விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மகள்கள் ஆற்றில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை
சேலம், டிச.28- இரண்டு மகள்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தால், மனவேதனையடைந்த குடும்பத்தினர் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தமிழக - கர்நாடகா எல்லையான அடிப்பாலாறு பகுதியில் உள்ள காவிரி நீர் தேக் கத்தில் நான்கு சடலங்கள் மிதப்பதாக அப்பகுதியில் கால் நடை மேய்ப்பவர்கள் கொளத்தூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தது சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி அருகே உள்ள நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த யுவராஜ், அவரது மனைவி பான் விழி, மகள்கள் நிதிக்ஷா என்ற நேகா, மற்றும் அக்சரா என்பது தெரிய வந்தது. மேலும், யுவராஜின் மூத்த மகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக நீரழிவு நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவரது இளைய மகளுக் கும் பரிசோதனை செய்ததில், அவருக்கும் நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த யுவராஜ், பான்விழி தம்பதிகள் தனது இரண்டு மகள்களையும், இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மேட்டூர் அருகே உள்ள தமிழக - கர்நாடக எல்லையான அடிப்பாலாறு காவிரி ஆற்றில், தனது இரண்டு மகள்களை தள்ளிவிட்டு விட்டு, தம்ப திகள் இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு ஈரோடு மாவட்டம், பர்கூர் காவல் துறையினரும், சென்னம்பட்டி மற்றும் மேட்டூர் வனத் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துரித உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
தருமபுரி, டிச.28- பாலக்கோட்டில் துரித உணவகம் மற்றும் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் செவ்வாயன்று ஆய்வு மேற் கொண்டனர். தருமபுரி மாவட்டம், கடைவீதி, பாலக் கோடு பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதி களில் உள்ள துரித உணவகங்கள், இறைச்சி கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலு வலர் நந்தகோபால் ஆய்வு மேற்கொண்டார். இதில் இரு கடைகளில் சுகாதாரமற்ற எண் ணெய் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அக்கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல பேருந்து நிலையத்தில் காலாவதி யான குளிர்பானங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட் டது. உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு மற்றும் புதுப்பிப்பு செய்ய வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சாலை விபத்து
ஈரோடு, டிச.28- கர்நாடக மாநிலம், மைசூ ருவிலிருந்து நாமக்கல் நோக்கி லாரி சென்று கொண் டிருந்தது. திம்பம் மலைப் பாதை 19 ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும் பியபோது, சத்தியமங்கலம் நோக்கி சென்ற காரும், மைசூ ரிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரும் போக்குவரத்து நெரி சல் காரணமாக சாலையோ ரத்தில் நின்று கொண்டிருந் தது. இந்நிலையில் நாமக் கல்லை நோக்கி சென்ற லாரி சாலையோரத்தில் நின்றி ருந்த 2 கார்கள் மீது மோதி யது. இதில் 2 கார்களும் சேத மடைந்தன. காரில் இருந்த 8 பேர் நல்வாய்ப்பாக காய மின்றி உயிர் தப்பினர்.