சேலம், டிச. 27- பல்கலைக்கழக ஆவணங் களை முறைகேடாக பயன்படுத்தி அரசு பணத்தை செலவிட்டதாக எழுந்த புகாரையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், துணை வேந்தர் அறை உள்ளிட்ட 7 இடங் களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பெரியார் பல்கலைக்கழகம் சமீப காலங்களாக பெரும் சர்ச் சைக்குரிய பல்கலைக்கழகமா கவே மாறி வருகிறது. பல்கலைக்க ழக துணைவேந்தர்கள் செய்யும் முறைகேடுகளும் பல்கலைக்கழ கத்தில் விதிமுறைகளும் அவ்வப் போது பரபரப்பு ஏற்படுத்தும். பல்கலைக்கழகத்தின் நடைபெ றும் ஊழல்கள் முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. பதிவாளர் உள் ளிட்ட அதிகார மட்டத்தில் உள்ள வர்கள் பணியிடங்கள் நிரப்புவதில் வெளிப்படை தன்மை இல்லாதது போன்ற நடவடிக்கைகளை அவ் வப்போது பல்கலைக்கழக ஊழி யர்கள் வெளிச்சம் போட்டு காட்டினர். சமீபத்தில் கூட பணியா ளர்கள் நிரப்புவதில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றா தது பல்கலைக்கழக பேராசிரியர் ஆராய்ச்சி படிப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந் தது. இதற்கெல்லாம் காரணம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பில் இருந்து வரும் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் என்கிற குற்றச் சாட்டும் எழுப்பப்பட்டது. இருப்பி னும் அவர் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோ சராக இருந்த இளங்கோவன் என் பவர் பல்கலைக்கழகத்தில் நடை பெறும் முறைகேடுகளை பட்டிய லிட்டு ஆதாரத்துடன் வெளிப்ப டுத்தி இருந்தார். மேலும், துணை வேந்தர் ஜெகநாதன் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி காவல் நிலை யத்திலும் புகார் அளித்திருந்தார். இதில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்து கொண்டு தனியாக நிறுவனம் தொடங்கி அந்த நிறுவனத்திற்கு பல்கலைக் கழக அதிகாரிகளை கொண்டு செயல்பட வைத்தது, அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதும், கல்வி வளர்ச்சிக்காக ஆக்கப்பூர் வமாக எதையும் செய்யாத நிலை யில் தன்னுடைய சொந்த நிறுவ னத்தை லாபம் பெற செய்ததாக குற்றச்சாட்டு மற்றும் விதிமீறல் குறித்து புகார்கள் துணை வேந்தர் மீது எழுந்தது. மேலும், பெரியார் பல்கலை கழகத்தில் நடைபெறும் விதி மீறல்கள் குறித்து தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று, துணைவேந்தர் ஜெகநாதான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். துணை வேந்தர் ஜெகநாதன் கைதைத்தொடர்ந்து, இவருக்கு உதவி புரிந்ததாக, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் துணை நிலை அதிகாரிகள் ஆகி யோரும் விசாரணை வளையத் திற்குள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. பல்கலைக்க ழகத்தில் சிண்டிகேட் குழு இருந் தாலும் பல்கலைக்கழக துணை வேந்தரே தனியாக சிண்டிகேட் அமைத்து ஊழலில் ஈடுபட்ட சம்ப வமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் போல் மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் கள் மீதும் கடுமையான குற்றச்சாட் டுகளை இதே சட்ட ஆலோசகர் இளங்கோவன் முன்வைத்துள்ள சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை தீவிர்படுத்து வார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக பெரி யார் பல்கலைக்கழக துணைவேந் தர் ஜெகநாதன் கைதைத்தொ டர்ந்து, இவருக்கு தொடர்புடைய 7 இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின் றனர். சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் துணைவேந்தர் அறை, அவரது இல்லம், விருந்தி னர் விடுதி, பதிவாளர் அலுவல கம், பதிவாளர் இல்லம் மற்றும் சூர மங்கலம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னதாக, சேலம் மாநகரம், சூரமங்கலம் சரகம், கருப்பூர் காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், நீதிமன்ற உத்தரவுபடி சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவல கத்திற்கு வந்து, சூரமங்கலம் குற் றப்பிரிவு காவல் ஆய்வாளர் கந்த வேல் முன்னிலையில் கையெ ழுத்திட்டார். கைது செய்யப்பட்டு பினையில் விடுவிக்கப்பட்ட துணை வேந்தர் ஜெகநாதன், பல்கலைக் கழக வாகனத்தில் காவல் நிலையம் வந்து கையெழுத்து இட்டுச்சென்ற தும் தற்போது சர்ச்சையை உரு வாக்கியுள்ளது.