சேலம் ஜூலை 30- அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி, 37 ஆவது வார்டுக்குட்பட்ட தாதம்பட்டி, காந்திஜி காலனியில் 2 ஆவது வீதிக்கு மட்டுமே, கழிவுநீர் கால்வாய், சாலை அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற வீதிகளில் சாலை பணி மட்டுமே அரைகுறையாக நடைபெற்று வருகி றது. எனவே, காந்திஜி காலனி முழுவ தும் கழிவுநீர் கால்வாய், சாலை அமைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாயக்கூடம் அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் கிழக்கு மாநக ரம், தாதம்பட்டி கிளை சார்பில், காந்திஜி காலனி அம்பேத்கர் சிலை அருகே செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிபிஎம் கிழக்கு மாநகரக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத் தில், அப்பகுதி பொதுமக்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.