தருமபுரி, டிச.19- தருமபுரி பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக் கும் பொருட்கள் பாது காப்பு அறையை விரைந்து திறக்க வேண்டும் என பய ணிகள் வலியுறுத்தியுள்ள னர். தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் தருமபுரி மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கிருஷ்ணகிரி, பெங்க ளூரு, மதுரை, திருச்சி, வேலூர், திருப்பதி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இதன்காரணமாக தருமபுரி புறநகர் மற்றும் நகர பேருந்து நிலையத்திற்கு, ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக பேருந்து நிலை யத்தில், தருமபுரி நகராட்சி சார்பில் பொருட்கள் பாதுகாப்பு அறை செயல்பட்டு வருகிறது. அதனை ஏலத்தில் எடுத்த ஒப் பந்ததாரர் வாடகை பணம் செலுத்தாத காரணத்தால் தருமபுரி நகராட்சி அதிகாரிகள் பூட்டி சென்றதாக அருகில் உள்ள வணி கர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக பூட்டியே உள்ளதால் பொருட்களை வைத்துச்சென்ற பொது மக்களும், பேருந்து நிலையத்தில் பொருட்களை விற்பனை செய்துவிட்டு பாதுகாப்பு அறையில் இரவு நேரங்களில் வைத்து செல்லும் சிறு வணிகர்களும் பெரும் பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக நகராட்சி நிர்வா கம் ஆட்களை நியமித்து பொருட்கள் பாதுகாப்பு அறையை நிர்வகிக்க வேண்டும் என சிறு வியாபாரிகள் மற்றும் பயணி கள் வலியுறுத்தியுள்ளனர்.