நாமக்கல், ஜூலை 27- மின் கட்டண உயர்வு அறிவிப்பை திரும்பப்பெற வேண் டும். சிறு குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என வாலி பர் சங்க திருச்செங்கோடு நகர மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்செங்கோடு நகர மாநாடு சூரியம்பாளையம் அலுவலகத்தில் நடைபெற் றது. இதில், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் இ.கோவிந் தராஜ், மாவட்ட செயலாளர் என்.கண்ணன், திருச்செங்கோடு நகர தலைவர் கோபி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றி னர். மாநாட்டில் திருச்சங்கோடு நகர வாலிபர் சங்க தலைவராக பி.குமார், செயலாளராக ஏ.சங்கர், பொருளாளராக வினோத் குமார் உள்ளிட்ட 15 கொண்ட நகரக்குழு தேர்வு செய்யப்பட் டது.