districts

img

கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள மனைவி, மகன்களை மீட்டு தர வலியுறுத்தி தந்தை கண்ணீருடன் மனு

தருமபுரி, ஜூலை 15- கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள  தனது மனைவி, மகன்களை மீட்டு தர வேண் டும் என வலியுறுத்தியும், கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தந்தை மனு அளித்துள்ளார். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள குடுமியாம்பட்டி கிராமபகுதியைச் சேர்ந்தவர் முருகன். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவ ருக்கு சித்ரா என்ற மனைவியும், ஜீவபாரதி என்ற மகள் மற்றும் செல்வராஜ், கார்த்திக்  ஆகிய மகன்களும் உள்ளனர். இவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட வறுமை காரண மான, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ் மற்றும் ஸ்ரீஜா என்பவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு குடும் பத்துடன் சென்றுள்ளனர். அங்கு வேலை பார்த்து வந்த நிலையில், தாஸ் மற்றும் ஸ்ரீஜா இருவரும் முருகன் குடும்பத்தினரிடம் ஆசை வார்த்தை கூறி ஆந்திர மாநிலத்திற்கு கூட்டி  சென்றுள்ளனர். அங்கு உங்கள் இரு மகன் களையும் படிக்க வைப்பதாகவும், தங்க ளுக்கு குழந்தைகள் இல்லாததால் அவர் களை வாரிசாக பார்த்துக் கொள்கிறோம் என்று பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி யுள்ளனர். தொடர்ந்து முருகனின் மகளான ஜீவபாரதிக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ரகு என்பவருக்கும் தாஸ் - ஸ்ரீஜா தம்பதியினர் கட் டாய திருமணத்தை நடத்தி வைத்ததாக கூறப் படுகிறது. திருமணத்துக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து முருகனின் மனைவி சித்ரா மற்றும் இரு மகன்களையும், தாஸ் - ஸ்ரீஜா தம்பதி யினர் தென்காசி மாவட்டத்திற்கு அழைத்து வந்து, விவசாய நிலங்கள் மற்றும் ஆடு மாடு களை பராமரிப்பதற்கு பயன்படுத்தி கொண்ட னர்.

இந்நிலையில், அவர்கள் சரிவர சம்பளம் கொடுக்காததால், “நாங்கள் அனைவரும் எங்களது சொந்த ஊருக்கு சென்றுவிடுகி றோம்” என முருகன் தெரிவித்துள்ளார். இத னைக்கேட்டு ஆத்திரமடைந்த தாஸ் – ஸ்ரீஜா, முருகனை தகாத வார்த்தைகளால் பேசி கடு மையாக தாக்கி, அவரது மனைவி மற்றும்  இரண்டு மகன்களையும் ஆடு மேய்ப்பதற் காக கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு, முருகனை துரத்தியுள்ளனர். அங்கிருந்து மன உளைச்சலுக்குள்ளாகி தப்பித்து வந்த முருகன், இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கி டையே கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு, அவ ரது உறவினர்கள் தென்காசி சென்றபோது, தாஸ் – ஸ்ரீஜா கொலை மிரட்டல் விடுத்துள்ள னர். இதுகுறித்து அரூர் வருவாய் கோட்டாட்சி யரிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவை தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி, நடைபெற்ற விசாரணையில் கொத் தடிமைகளாக இல்லை என பதில் மனு வந்த தாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொலை மிரட்டல் விடும் வீடியோ பதிவு காட்சி உள் ளிட்ட ஆதாரங்களை வைத்து, எனது மனைவி மற்றும் மகன்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முருகன்  தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.