அவிநாசி, மார்ச் 13- அவிநாசி அருகே கருவலூரில் நீதிமன்ற உத்தரவுப்படி உரிய வசதிகளுடன் இறைச் சிக் கடைகள் அமைத்து ஏலம் விட வேண்டும் என இறைச்சி கடை உரிமையாளர்கள் முதல் வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ள னர். இதுகுறித்து, இறைச்சிக் கடை உரிமை யாளர்கள் சார்பில் இளங்கோவன் என்பவர் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது. கருவலூரில் கோழி, மீன், ஆடு உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் செயல்படு கின்றன. இதில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் போதுமான இடவசதி, தண்ணீர் வசதி, மின் சார வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரா மல் கடைகள் ஏலம் விடப்படுவதால், இறைச் சிக்கடை உரிமையாளர்கள் அவர்களது இடங்களிலேயே கடைகளை அமைத்துக் கொள்கின்றனர். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்ப டையில், ஊராட்சிக்கு சொந்தமான இந்திரா நகர் பகுதியில் இறைச்சிக் கடைகளுக்கு இடம் ஒதுக்கி உரிய வசதிகள் செய்த பிறகு கடைகள் ஏலம் விடப்படும் என தெரிவித்தி ருந்தனர். ஆனால் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, காளிபா ளையம் பகுதியில் உள்ள மந்தை புறம் போக் கில் உரிய வசதிகளின்றி இறைச்சிக் கடைகள் அமைக்கப்பட்டு மார்ச் 16 ஆம் தேதி இந்த கடைகள் ஏலம் விடப்படவுள்ளது. இது இறைச்சிக் கடை உரிமையாளர் களுக்கு மேலும் பிரச்சனைகளுக்கு வழிவ குக்கும். ஆகவே பொதுமக்களுக்கு இடை யூறு இல்லாத பகுதியில் போதுமான வசதி கள் அமைத்து இறைச்சிக் கடைகளை ஏலம் விட வேண்டும் எனக் இந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.