நல்லம்பள்ளிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்
நல்லம்பள்ளிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல் தருமபுரி, பிப்.14- தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் விரிந்த கிராமப் பகுதியை கொண்டது. நல்லம்பள்ளியில் வருவாய் வட்ட அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவ லகங்கள் இயங்கி வருகின்றன. பட்டா சிட்டா, அரசின் உத வித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களுக்கு நல் லம்பள்ளிக்கு கிராம மக்கள் வந்து செல்கின்றனர். வட்டத் தின் எல்லையில் உள்ள எச்சனஅள்ளி, கோணங்கள்ளி, எர் பையனள்ளி, பண்டஹள்ளி, பங்குநத்தம் ஆகிய ஐந்து ஊராட் சிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அப் பகுதியில் உள்ள கிராமமக்கள் நல்லம்பள்ளிக்கு வர வேண்டும் என்றால் தருமபுரிக்கு வந்து, பின்னர் நல்லம் பள்ளிக்கு செல்ல வேண்டும். இக்கிராம மக்கள் இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் மாறி நல்லம்பள்ளி செல்ல வேண்டியுள்ளது. இதனால் பணவிரயமும், நேரவிரயமும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நல்லம்பள்ளிக்கு எளி தாக சென்று வர அக்ரஹாரத்தில் தொடங்கி புதூர்தின்னூர், காளேகவுண்டனூர், சின்னாகனஅள்ளி, எர்ரபையனள்ளி, கருபையனஅள்ளி, பண்டஅள்ளி, பங்குநத்தம், நாகர்கூடல், பாலஜங்கமனள்ளி ஆகிய கிராமங்களின் வழியாக அரசு பேருந்து காலை, மாலை நேரங்களில் இயக்க வேண்டு மென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இருசக்கர வாகனம் திருட்டு
இருசக்கர வாகனம் திருட்டு நாமக்கல், பிப்.14- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரத்தின் மைய பகுதியான தொண்டிகரடு பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகி றார். இவரது வீட்டிற்கு முன்பு செவ்வாயன்று காலை சாவி யோடு நிறுத்தப்பட்டிருந்தது. இதனை நோட்டமிட்டவர்கள் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். வீட்டின் வெளியே நிறுத்தப்பட்ட தனது இரு சக்கரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் கண்காணிப்பு கேமராவை பார்த்த பொழுது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாகனத்தை திருடி சென் றது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறை சார்பில் குறைதீர் முகாம்
காவல் துறை சார்பில் குறைதீர் முகாம் தருமபுரி, பிப்.14- தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில், காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலை மையில் பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற் றது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 119 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 91 மனுக்கள் மீது தீர்வு காணப் பட்டன. நிலுவையில் 28 மனுக்கள் உள்ளன. இந்நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் இளங்கோவன், பால சுப்பிரமணியன், காவல் ஆய்வாளர்கள் அன்பழகன், வேலு தேவன், பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வரி நிலுவைகளை வசூலிக்கும் பணி: சேலம் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்
சேலம், பிப்.14- சேலம் மாநகராட்சியில் சொத்து, குடி நீர், தொழில் வரி நிலுவையை வசூலிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்ட லாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்கள் உள் ளன. இந்த நான்கு மண்டலங்களிலும் 2.45 லட் சத்துக்கு மேல் வீடு, கடைகள், வணிக நிறு வனங்கள் உள்ளன. மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்க ளிலும் 750க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். சுகாதாரத்துறையில் 1500க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வரு கின்றனர். வரி வசூலை கொண்டே பணி யாளர்களுக்கு சம்பளம், நிர்வாக நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூர மங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில் நிலுவை யில் உள்ள சொத்து வரி, குடிநீர்வரி, கடை வாடகையை வசூலிக்கும் பணியில் வரி வசூ லிப்பவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வரு கின்றனர். வரி செலுத்தாமல் நீண்ட நிலுவை யாக வைத்துள்ளவர்களை கண்டறிந்து அவர் களுக்கு நோட்டீஸ் வழங்கியும், அவ்வாறு செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு, சீல் வைப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற னர். கடந்த சில நாட்களாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளை சீல் வைத்தும் வரு கின்றனர். இதனிடையே, கொண்டலாம்பட்டி மண்டலம், 60 ஆவது வார்டுக்குட்பட்ட சீல நாயக்கன்பட்டியில் 5 தனியார் பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் சொத்து வரியை செலுத்த வில்லை. இதையடுத்து மண்டல வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரன், பணியாளர்கள் அந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்று சீல் வைத்தனர். உடனடியாக பெட்ரோல் பங்க் கின் நிர்வாகிகள் சேலம் மாநகராட்சி அதி காரிகளிடம் பேசினர். அப்போது ஒரு நாளில் சொத்து வரி நிலுவையை செலுத்தி விடுவ தாக தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரி களின் அறிவுரையின் பேரில், வருவாய் அதி காரிகள் பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைத் ததை நீக்கினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சியில் நான்கு மண் டலங்களிலிருந்து சொத்து வரி, தொழில் வரி மூலம் பணியாளர்களுக்கு ஊதியம், வளர்ச் சிப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. ஒரு வருடத்திற்கு மேல் சொத்து, குடிநீர், தொழில் வரி நிலுவையில் வைத்துள்ளவக களுக்கு அந்தந்த மண்டலத்துக்குட்பட்ட வரு வாய் அதிகாரிகள், வரி வசூலிப்பவர்கள் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டும், நிலுவை வரியை வசூலிக்கும் பணி தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆணையர் அறிவுரையின் பேரில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சேலம் மாநக ராட்சி அனைத்து வரி வசூல் மையங்களும் திறந்திருக்கும். எனவே சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகை மற்றும் கடை வாடகை அனைத்து நிலுவை தொகைக ளையும் செலுத்தி கொள்ளலாம், என்றார்.
இலக்கியப் போட்டி: பரிசளிப்பு விழா
இலக்கியப் போட்டி: பரிசளிப்பு விழா தருமபுரி, பிப்.14- இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளப்பட்டி தனியார் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடை பெற்றது. தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில், 5 மண் டலங்களில் இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞர் இலக் கியத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அடுத்த வாரம் கோவையில் நடைபெற உள்ள சிறுவாணி இலக்கியத் திரு விழாவை முன்னிட்டு, தருமபுரி நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலக்கியப் போட்டிகள் நடை பெற்றன. இரண்டு நிமிட பேச்சாற்றல், நூல் அறிமுகம், விவாத மேடை, இலக்கிய வினாடி வினா, ஆறு நிமிட பேச்சுப்போட்டி, ஓவியம், தொன்மை தொடர்ச்சி, ஆங்கில நூல் திறனாய்வு, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துதல் முதலான போட்டி கள் நடைபெற்றன. இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாண வர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் அர.கோகிலவாணி தலைமை வகித்தார். நூலகர் சி.சரவணன் அறிமுக உரையாற்றினார். மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா. மகேந்திரன், ஜெயம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சி.பரஞ்சோதி, மாவட்ட நூலக ஆய்வாளர் டி.மாதேஸ்வரி, மாவட்ட மைய நூலகர் இரா.மாதேஸ்வரன், கண்காணிப் பாளர் த.மணேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த னர். தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் ஆர்.சிசுபாலன், தருமபுரி மாவட்ட தமிழ் கவிஞர் மன்றத்தின் தலைவர் கோ. மலர்வண்ணன், ஆசிரியர் ப.இளங்கோ, மாவட்ட படைப்பா ளர் பதிப்பாளர் சங்கச் செயலாளர் மா.பழனி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு மருதம் நெல்லி கல்விக்குழுமத் தலை வர் கோவிந்த், ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்வில், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடனை திருப்பிக்கட்ட முடியாத விரக்தியில் ஒருவர் தற்கொலை
கடனை திருப்பிக்கட்ட முடியாத விரக்தியில் ஒருவர் தற்கொலை தருமபுரி, பிப்.14- பாலக்கோடு அருகே வாங்கிய கடனை திருப்பிக்கட்ட முடியாத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கடகத்தூ ரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). கட்டட மேஸ்திரியான இவர், கடந்த 6 வருடத்திற்கு முன்பு பழைய வீட்டை புதுப்பிக்க, தனியார் நிதி நிறுவனத்தில் அடமான கடன் பெற்றுள்ளார். இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூருவில் வேலை செய்யும் போது, ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். தற்போதைய சூழலில் கடனை எப்படி கட்டுவது என அவருடைய மனைவி கௌரியிடம் புலம்பியுள்ளார். இந்நிலையில், கடனை கட்ட முடியாத விரக் தியில், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து பாலக்கோடு காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் திவிக பரப்புரை பயணம்
சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் திவிக பரப்புரை பயணம் அவிநாசி,பிப்.14- திராவிட விடுதலைக் கழகம் சார்பில் பாசிச பாஜகவின் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம், சமூக ஒற்றுமையை காப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு பரப்புரையில் ஈடுபட்டனர். பத்தாண்டு மோடி ஆட்சியில் சட்டங்கள் சீர்குலைக்கப்பட் டன. மதவெறி தூண்டப்பட்டது. மாநில அடையாளங்கள் அழிக்கப்பட்டன, நீட் தேர்வால் அனிதா என்ற மாண வியை இழந்தோம். ஜிஎஸ்டி-யால் தமிழ்நாட்டின் வருவாயை இழந்து உள்ளோம். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி ஆட்சி யின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் பிரச் சாரம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்த பரப்புரை பய ணம் நடைபெறுகிறது இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 22 இடங்களில் நடைபெற்றது. அவிநாசியில் நடைபெற்ற இவ்வியக்கத்தில், மாநிலப் பொருளாளர் துரைசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, பிப். 14- ஒன்றிய மோடி அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் சூரம் பட்டி நான்கு ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகிளா காங்கிரஸ் தலைவர் எம்.தீபா தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் கற்பூரம், சாம்பி ராணி, ஊதுபத்திகளுக்கு அநியாய ஜிஎஸ்டி வரி விதிப்பு ஏற்படுத்தியதுடன் பூண்டு விலை ஒரு கிலோ 600 ரூபாய்க்கு மேல் விற்கிற நிலைமைக்கு ஆளாக்கிய மோடி அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இவ்வியக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலை வர் ஆர் கிருஷ்ணவேணி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப் பாளர் டி.திருச்செல்வம் மகிளா காங்கிரஸ் தலைவர் சிந்துஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
கோவையில் ரூ.40 லட்சம் மோசடி
கோவை, பிப்.14- செல்வபுரம் பகுதியில் நகை கடை வைப்ப தாக ஏமாற்றி உறவினரிடம் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட் டார். கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் குடும்பத் தோடு வசித்து வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒரு முறை தனது சகோதரியை பார்ப்பதற் காக கோவைக்கு வருவார். அந்த நேரத்தில் கோவிந்தனின் சகோதிரியின் மகன் ஸ்ரீகாந்த், நகைக் கடை ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்கு முதலீடு செய்து பங்குதாரர் ஆகு மாறு கோவிந்தனிடம் கூறி உள்ளார். இதை அடுத்து கோவிந்தன ரூ.40 லட்ச ரூபாயை கடை திறக்க முதலீடு செய்தார். ஆனால் பணத்தைப் பெற்று பல நாட்கள் ஆகியும் ஸ்ரீகாந்த் நகைக் கடையை திறக்காமல் இருந்து உள்ளார். இதை அறிந்த கோவிந் தன் தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டு உள்ளார். ஆனால் ஸ்ரீகாந்த் பணத்தை திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந் தார். இதை அடுத்து கோவிந்தன் செல்வபு ரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், ஸ்ரீகாந்தை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
காட்டு தீயை கட்டுப்படுத்த தீத்தடுப்பு கோடு
கோவை, பிப்.14- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத் தும் வகையில், தீத்தடுப்பு கோடுகள் அமைக் கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவை வனக்கோட்டத்தில், கோவை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, போளுவாம்பட்டி என 7 வனச்சரகங்கள் சுமார் 670 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந் துள்ளது. இங்கு புலி, யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருது என ஏராளமான வன விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன. தற்போது கோடை காலம் துவங்க வுள்ள நிலையில், வனத்தினுள் வறட்சி ஏற்பட்டு வெயிலின் தாக்கத்தால் காய்ந்து இலைகள் மற்றும் சருகுகளில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும், சமூக விரோதிகள் காய்ந்த புற்களில் தீ வைப்பது போன்ற தவறுகளா லும் காட்டுத்தீ பரவும் அபாயமுள்ளது. இதனை தடுக்கும் வகையில் கோவை மாவட்ட வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வனத்தை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம் - கோத்தகிரி செல்லும் சாலை மற்றும் மேட்டுப்பாளையம் - குன்னூர் செல்லும் சாலைகளில் 3 முதல் 6 மீட்டர் அகலம் வரை வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் காய்ந்த செடிகள், புற்கள் மற்றும் புதர்கள் வெட்டப்பட்டு வரு கின்றன. மேலும், சாலையோரம் உள்ள நெகிழிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்களையும் அப்புறப்படுத்தி வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச் சரகங்களில் சுமார் 200 கிலோமீட்டர் தொலை விற்கு வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கறவை மாடுகளில் மடிவீக்க நோயை தடுப்போம் விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்க கூட்டம்
கறவை மாடுகளில் மடிவீக்க நோயை தடுப்போம் விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்க கூட்டம் உடுமலை, பிப். 14- கறவை மாடுகளில் மடிவீக்க நோய் தடுப்பதில் பால்கா ரர்களின் பங்கு என்ற தலைப்பில் விழிப்புணர்வு மற்றும் செயல் முறை விளக்க கூட்டம் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்து வக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடை பெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பா.குமாரவேல் குறுந்தகடு மற்றும் துண்டுபிரசுரங்களை வெளியிட்டு உரையாற்றினார். ஈரோடு காமதேனு மாட்டுத் தீவன நிறுவன மண்டல விற் பனை மேலாளர் எ.சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார். பாப் பன்குளம் ஆவின் கால்நடை மருத்துவ ஆலோசகர் மருத்து வர் எஸ்.குணசீலன் மற்றும் மானுப்பட்டி ஆவின் நிறுவன மேலாளர் எஸ்.டீ. அப்துல் லத்தீப் ஆகியோர் சிறப்புரை ஆற்றி னர். இதில், மாடுகளில் மடிவீக்க நோய் தடுப்பதற்கான பாரம்ப ரிய சிகிச்சை முறைகள், தீவன மேலாண்மை மற்றும் மாடுக ளில் மடிவீக்க நோயை தடுப்பதற்கான புதிய தொழில் நுட்பங் கள் பற்றி முறையே முனைவர் பா.மேகலா, முனைவர் கதிர் வேலன் மற்றும் முனைவர் எஸ். கிருஷ்ணகுமார் சிறப்பு விரி வுரைகள் வழங்கினர். முனைவர் எல். அருன் மற்றும் முனை வர் வே.உமா ஆகியோர் தொழில் நுட்பங்கள் பற்றிய செயல் முறை விளக்கம் கொடுத்தனர். பால்வளத் துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ராஜராஜன் விவசாயி களை ஒருங்கிணைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பால்காரர்கள் மற்றும் கறவைமாடு வளர்ப்போருக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தானுவாஸ் தாதுப்புக் கலவை வழங்கப்பட்டது. இதில் பல் வேறு மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்ற னர்.
தாவரவியல் பூங்காவில் சிசிடிவி கேமராக்கள்
தாவரவியல் பூங்காவில் சிசிடிவி கேமராக்கள் உதகை,பிப். 14- நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் ஆண்டுதோறும் ஏப், மே மாதங்களில் கோடை சீசன். செப், மற்றும் அக், மாதங்களில் இரண்டாவது சீசன் நடக்கிறது. பூங் காவுக்கு ஆண்டுதோறும் சராசரியாக, 30 லட்சம் சுற்றுலாப் பய ணிகள் வந்து செல்கின்றனர். நடப்பாண்டு சீசனை ஒட்டி, பூங் காவில் மண் தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவுப் பணி, தொட்டிகளில் மண் நிரப்பும் பணி உள்ளிட்ட பணிகள் தீவி ரமாக நடந்து வருகிறது. மேலும் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பூங்காவை சுற்றி ராஜ்பவன் இருப்ப தால் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பூங்காவின் நுழைவு வாயில், தோட்டக்கலை அலுவலகம், என, பாது காப்பை பலப்படுத்தும் வகையில், 32 சிசிடிவி கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ளது.
சாதிய பாகுபாடு வட்டாட்சியர் விசாரணை
கோபி, பிப்.14- கோபி அருகே குறிப்பிட்ட சமுதா யத்தினருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வட்டாச்சியர் நேரில் விசாரணை நடத்தினார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சியில் இலவச வீட்டுமனை வேண்டி மனுக்கள் பெறப்பட்டதில், ஏழு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த ஏழு பேரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று பயனாளிகளை நிராகரித்து விட்டு, வேறு சமூகத்தைச் சேர்ந்த சில பயனாளிகளை தேர்வு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாதிக் கப்பட்ட மக்கள், பொம்மநாயக்கன்பா ளையம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு திரண்டு, இலவச வீட்டு மனை வேண்டி மனு அளித்த அனை வருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டாச்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்நிலையில், புதனன்று கோபி வட் டாச்சியர் கார்த்திகேயன், நில வருவாய் நில ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவ லர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகி யோர் கொண்ட குழுவினர் நான்கு பய னாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
லாட்டரி விற்பனை - ஐந்து பேர் கைது
லாட்டரி விற்பனை - ஐந்து பேர் கைது நாமக்கல்,பிப். 14- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தமிழக அர சால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக, திருச்செங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் தனிப் படை கள் அமைக்கப்பட்டு, இதில் ராஜா கவுண்டம்பாளையம் முனியப்பன் கோவில் அருகே லாட்டரி சீட்டு விற்பனை பணபரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த முகம்மது ஹிமாமுதீன்(35), ராஜா கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(33), நந்தகுமார்(37), சூரியம்பா ளையம் பகுதியைச் சேர்ந்த சுதாகர்(44),வேலு(52), ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற் கொண்டனர். பிடிபட்ட ஐந்து பேரிடமிருந்து செல்போன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த முகம்மது ஹிமாவுதீன் மரப்பாலம் பகுதியில் உள்ள கேவிபி வங்கியில் ரூபாய்.11 லட்சத்து டன் லாட்டரி சீட்டு வாங்குவதற்கு பயன்படுத்தி வந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
ஆளுநர் உதகை வருகை
ஆளுநர் உதகை வருகை உதகை,பிப். 14- மூன்று நாள் பயணமாக ஆளுநர் ரவி இன்று (வியாழ னன்று) உதகை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம், மதியம் கோவை விமான நிலையம் வருகிறார். பின்பு, சாலை மார்க்கமாக கோத்தகிரி சாலை வழியாக உதகை ராஜ்பவ னுக்கு மாலை வருகிறார். அன்றைய தினம் ராஜ்பவ னில் தங்கி ஓய்வு எடுக்கி றார். 16- ஆம் தேதியன்று முத் தநாடு மந்துவில் உள்ள தோடர் இன பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகி றார். இதைத்தொடர்ந்து 18- ஆம் தேதியன்று காலை ராஜ் பவனில் இருந்து கார் மூலம் கோவைக்கு சென்று அங்கி ருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். முன் னதாக ஆளுநர் வருகையை ஒட்டி சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர். மேலும் ஆளுநர் வரு கையையொட்டி கவர்னர் மாளிகை தாவரவியல் பூங் கா பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத் தப்பட்டு உள்ளது.