பட்ஜெட் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் செல்வராஜ் பேசும்போது, இந்த பட்ஜெட்டில், மக்களை பாதிக் காத வகையில் வருவாய் உயர்த்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதை தெளி வுபடுத்த வேண்டும். சொத்து வரியை உயர்த்தினால்தான் 15 ஆவது நிதிக்குழு மானியம் வழங் கப்படும் என்று ஒன்றிய அரசு சொல்வது உள்ளாட்சி ஜனநாய கத்தை குழி தோண்டிப் புதைப்ப தாகும். அதற்கு மாநில அரசு இட மளிக்கக் கூடாது. வருவாய் ஆதாரத்தை திரட்டுவது ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்காத வகை யில் இருக்க வேண்டும் என் றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை பேசும்போது, இந்த பட்ஜெட் சிறப்பாக இருப் பதாகக் கூறி வரவேற்பு தெரிவித் தார். அத்துடன் குடிநீர் விநியோ கம் செய்யவும், சாக்கடை கழிவு நீரை அகற்றவும், இரவு பகலாக எரியும் தெரு விளக்குகளை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார். வெளிநடப்பு முன்னதாக மேயர் தினேஷ் குமார் பட்ஜெட் உரையை வாசிக் கத் தொடங்கியவுடன் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வை எதிர்த்து வெளி நடப்புச் செய்தனர். அதேபோல் பாஜக உறுப்பினர்கள் இருவ ரும் வெளியேறினர்.
திருப்பூர், ஏப்.6- திருப்பூர் மாநகராட்சியில் திமுக தலைமையிலான நிர்வா கம் பொறுப்பேற்ற நிலையில் மாந கராட்சி மேயர் ந.தினேஷ்குமார் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான பட் ஜெட் அறிக்கையை புதனன்று தாக்கல் செய்தார். திருப்பூர் மாநகராட்சி மாமன் றக் கூட்டம் புதனன்று நடைபெற் றது. இதில் மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலை வர் கு.கோமதி 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக் கையை மேயர் ந.தினேஷ்குமாரி டம் வழங்கினார். இதைத் தொடர்ந்து மாமன்றத்தில் பட் ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்து மேயர் ந.தினேஷ்குமார் உரையாற்றினார். இதில், திருப்பூர் மாநகராட்சி மொத்த வருவாய் ரூ.1558 கோடியே 54 லட்சத்து 62 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள் ளது. அதேசமயம் மொத்த செலவு ரூ.1568 கோடியே 63 லட்சத்து 16 ஆயிரம் ஆகும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும் நிலையில் பற்றாக்குறை ரூ.10 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரம் ஆக உள்ளது. இந்த பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்து மேயர் தினேஷ் குமார் பேசுகையில்: நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழகத்தில் இரண்டாவது இடத் தில் இருந்த திருப்பூர் மாநகராட்சி புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு முதல் இடம் பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.5 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் 12 பணிக ளுக்கு நிர்வாக அனுமதி பெறப் பட்டுள்ளது.
குடிநீர் மேம்பாடு
குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் ரூ.1120 கோடியே 57 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட தில் 74 சதவிகித பணிகள் நிறைவ டைந்துள்ளன. ஆண்டு இறுதிக் குள் திட்டம் முழுமை அடைந்து கூடுதல் குடிநீர் பெறப்பட்டு குடிநீர் விநியோகக் கால இடைவெளி கணிசமாக குறையும். அத்துடன் கோடை காலமாக உள்ளதால் நீர்த் தட்டுப்பாடு இல்லாமல் மாநக ராட்சிப் பகுதிகளில் நீராதாரத்தை ஆய்வு செய்து புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இவை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மாநகரில் பாதாளச் சாக்கடை திட்டப் பணியில் முதல் கட்ட திட் டத்தில் 72 தவிகித பணிகள் முடிவ டைந்துள்ளன. இதனால் நகரின் 60 சதவிகித பகுதிகள் பயன் பெறும். பாதாளச் சாக்கடை இரண் டாவது கட்ட திட்டப் பணிகளை நிறைவேற்ற விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி
சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் உத்தேசிக்கப்பட்ட 28 பணிகளில் 10 பணிகள் முடிவ டைந்துள்ளன. மீதிப் பணிகளும் மார்ச் 2023க்குள் முடிவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள் ளது. முடிவடைந்த பணிகள் மூலம் ரூ.4 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள் ளது. மொத்த பணிகளும் முழுமை அடைந்து பயன்பாட்டுக்கு வருவ தன் மூலம் ரூ.10 கோடி வருவாய் ஈட்ட சாத்தியமுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட் டத்தில் 28 நுண்ணுயிர் உரமாக்கல் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு தயாரிக்கப்படும் உரம் விவசாயிகளுக்கு மலிவு விலை யில் வழங்கப்படும். அத்துடன் மக் கும் கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும் 500 டன் உலர் கழிவுக் குப்பையில் 10 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இடுவாயில் மூன்று ஏக்கர் பரப்பளவில் புதிய நவீன மாதிரி தங்கும் உறைவிட பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே இடுவாய் கிராமத்தில் 12.50 ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்த முறையில் அறிவி யல் பூங்கா வடிவமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறி னார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி துணை மேயர் பாலசுப் பிரமணியம் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பி னர்கள், மாநகராட்சி அலுவலர் கள் கலந்து கொண்டனர்.