districts

img

தலித் மக்களுக்கு மனை பட்டாவுக்கான நிலத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தல்

தருமபுரி, அக்.30- அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் நல்லம்பள்ளி ஒன்றிய 3-ஆவது மாநாடு நல்லம்பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு, ஒன்றிய தலைவர் எம்.சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை  செயலாளர் எம்.வேலுச்சாமி சங்க கொடி யேற்றி வைத்தார். ஒன்றியகுழு உறுப்பினர்  பி.முருகேசன் வரவேற்று பேசினார். இதை யடுத்து மாவட்ட துணை செயலாளர் கே. கோவிந்தசாமி மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் கே.எல்லப்பன் ‌வேலை அறிக்கையும், ஒன்றிய பொருளாளர் எம்.அண்ணாதுரை வரவு-செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். விவசாய தொழிலாளர்  சங்க மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன்  சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கே.குப்புசாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் முனியப்பன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் எல்.மாலா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாநில செயலாளர் ஜி.கணபதி நிறைவுறையாற்றினார்.

நல்லம்பள்ளி ஒன்றிய தலைவராக கே. எல்லப்பன், ஒன்றிய செயலாளராக எம். சிவசந்திரன், பொருளாளராக எம்.அண்ணா துரை உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். முன்னதாக, நல்லம்பள்ளி ஒன்றியத் திற்குட்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண் டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 200  நாள் வேலையும், தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். வீடற்ற மக்களுக்கு ரூ.10 லட்சத் தில் வீடு கட்டிக் கொடுக்கவேண்டும். 60 வயது  பூர்த்தி அடைந்த அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூ தியம் வழக்க வேண்டும். நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்ட அனைத்து மாற்றுத்திறனாளி தொழிலாளர் களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ்  வேலை வழங்கவேண்டும். மிட்டாரெட்டி அள்ளி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு (ச.எண். 185) வழங்கப்பட்ட வீட்டு மனைப் நிலத்தை அளந்து பட்டாவை உடனடி யாக வழங்க வேண்டும். தடங்கம் ஊராட் சிக்குட்பட்ட தாளாப்பள்ளம் கிராமத்தில் பல  ஆண்டுகாலமாக குடியிருந்து வாழும் மக்க ளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். டொக்கு போதனஅள்ளி ஊராட் சிக்குட்பட்ட பூவல்மடுவு கிராமத்தில் பல ஆண்டு காலமாக அனுபவித்து வரும் மக்க ளுக்கு நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.