சேலம், ஜன.2- வெள்ளி பொருட்களுக்கு இரட்டை ஜிஎஸ்டி வரி முறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என சேலம் வெள்ளி கொலுசு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியா ளர்கள் வலியுறுத்தி உள்ளனர். சேலத்தில் வெள்ளி கொலுசு வியாபாரி கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழா அண்மை யில் நடைபெற்றது. இந்த அலுவலகத்தினை சேலம் உதவி காவல் ஆணையாளர் நாக ராஜ் துவக்கி வைத்தார். அதனைத்தொ டர்ந்து சேலம் வடக்கு காவல் உதவி ஆணை யாளருக்கு வெள்ளி கொலுசு உற்பத்தியா ளர்கள் நினைவுப் பரிசு வழங்கினர். இந்நி கழ்ச்சியில், வெள்ளி கொலுசு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர் வாகிகள் பேசுகையில், ஒன்றிய அரசு வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி பொருட்க ளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண் டும்.
தற்பொழுது வெள்ளி மூலப்பொருட் களுக்கும், கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆப ரணங்களுக்கு இரட்டை ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலில் உள்ளது. இதனால் வெள்ளி தொழில் செய்ய முடியாமல் அதிக நபர்கள் கட்டிட வேலைக்கும் பல்வேறு கூலி வேலைகளுக்கும் சென்று விட்டனர். எனவே, ஒன்றிய அரசு இரட்டை ஜிஎஸ்டி முறையை கைவிட்டு வெள்ளி பொருட்க ளுக்கு ஒற்றை ஜிஎஸ்டி முறையை அமல் படுத்த வேண்டும். வெள்ளி தொழிலை நம்பி சேலம் மாவட் டத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலா ளர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதா ரத்தை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும். மேலும், வெள்ளி கொண்டு செல்லும் தொழி லாளர்களை சந்தேகத்துடன் பார்க்கும் முறையை கைவிட வேண்டும். அவர்க ளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ளி தொழிலாளர் கள் நல வாரியத்தை விரைந்து செயல்ப டுத்த வேண்டும், என்றனர்.