districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

சேலம், பிப்.18- திருமணிமுத்தாறின் ராஜவாய்க்காலில் தொடர்ந்து சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தினர், திங் களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்த பின் செய்தியாளர்களிடம்  கூறுகையில், திருமணிமுத்தாறு பகுதி யிலுள்ள அமானி கொண்டலாம்பட்டி பகுதி யைச் சேர்ந்த விவசாயிகள் அங்கு பல ஆண்டு களாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள டையிங் ஆலைகள் சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சாயக்கழிவுநீரை வெளியேற்றுவதால் ராஜ வாய்க்கால் பாசன விவசாயிகள் வாய்க்கா லில் வரும் நீரை பயன்படுத்த முடியாத நிலை  உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தி டம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை. வாய்க்காலில் வெளி யேறும் ரசாயனக் கழிவுகளால் நிலத்தடி நீர்,  விவசாயக் கிணறுகள் முழுவதும் மாசடைந் துள்ளது. இதனால் ஆடு, மாடுகள் தண்ணீ ரைக் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. பயிர்கள் சேதமாவதுடன், விவசாயிக ளின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்படு கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

போலி உதவி இயக்குனர் கைது

உதகை, பிப்.18- அரசு வேலை வாங்கித் தருவதாக  பல லட்சம் மோசடி செய்த பஞ்சா யத்து போலி உதவி இயக்குனரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய்  மோசடி செய்த நபர் மீது உரிய நட வடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப் பட்டவர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில், மாவட்ட  ஆட்சியர் உடனடியாக காவல் துறை கண்காணிப்பாளர் நடவ டிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பெயரில் தனிக் குழு அமைத்து போலி உதவி இயக்குனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனு அளித்த ஒரே  நாளில் நடவடிக்கை எடுத்த மாவட்ட  ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விகடன் இணையதளம் முடக்கம் திருப்பூர் செய்தியாளர்கள் கண்டனம்

திருப்பூர், பிப்.18 - விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு திருப்பூர்  மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள் ளது. இது தொடர்பாக செவ்வாயன்று சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்கு பிரதமர் சென்றபோது இந்தியர்கள் நடத் தப்பட்ட விதம் குறித்து நூற்றாண்டு பழமையான, பாரம்பரிய மிக்க விகடன் நிறுவன இணைய இதழில் கேலிச்சித்திரம் வரை யப்பட்டிருந்தது. இதற்கு சமூக வலைதளங்கள் மூலமாக வும், பேட்டிகள் மூலமாக பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து மிரட்டலும், எச்சரிக்கையும் விடுத்து வந்தனர்‌.  அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரி மையை நசுக்கும் வகையில் விகடன் இணையதளம் கடத்த 15ஆம் தேதி முடக்கப்பட்டது. முடக்கப்பட்டதற்கான கார ணம் குறித்து அரசு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக் கம் வழங்கப்படவில்லை. கேலிச்சித்திரம் என்பது இதழியல்  துறையில் பிரிக்க முடியாத ஒரு அங்கம்‌. அதை முடக்க நினைப் பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.  எனவே ஊடகங்களை அச்சுறுத்துவதையும், அடிபணிய வைப்பதையும் தவிர்த்து ஊடகங்கள் முன்வைக்கும் கருத் துக்களுக்கு தீர்வு காண அரசுகள் செயல்பட வேண்டும் என  திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. 

கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ள காவலர்கள் கட்டாயப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் பலவஞ்சிபாளையம் பகுதி மக்கள் புகார்

திருப்பூர், பிப்.18 - கொலை குற்றத்தை ஒப்புக் கொள்ள வலியுறுத்தி அவிநாசிபா ளையம் போலீசார் தங்களை துப் பாக்கி முனையில் மிரட்டுவதாக திருப்பூர் பலவஞ்சிபாளையம், ஜெய லலிதா நகர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் செவ்வாயன்று மனு அளித்த னர். திருப்பூர் மாவட்டம் பல்லடம்  அருகே சேமலைக்கவுண்டன்பாளை யத்தில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி  விவசாயி தெய்வசிகாமணி (78), அவ ருடைய மனைவி அலமேலு (75) இவர்களது மகன் செந்தில்குமார் ஆகியோர் அவர்களது தோட்டத்து வீட்டில் கொடூரமாக கொலை செய் யப்பட்டனர். இந்த வழக்கில் மாவட்ட  காவல்துறை சார்பில் 14 தனிப்படை கள் அமைக்கப்பட்டும் 2 மாதங்களை கடந்தும் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலை யில் இந்த கொலை குற்றத்தை ஒப்புக் கொள்ள வலியுறுத்தி அவிநாசிபா ளையம் போலீசார் தங்களை துப் பாக்கி முனையில் மிரட்டுவதாக திருப்பூர் பலவஞ்சிபாளையம், ஜெய லலிதா நகர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் செவ்வாயன்று மனு அளித் தனர். அந்த மனுவில் கூறியிருப்பத வாது, பலவஞ்சிபாளையம் ஜெயல லிதா நகர் பகுதியில் நாங்கள் 40 குடும் பத்தினர் வசித்து வருகிறோம். குறவர்  சமூகத்தை சார்ந்த நாங்கள் ஆட்டாங் கல் கொத்தும் வேலை செய்து வரு கிறோம்.  கடந்த டிசம்பர் 21ஆம் தேதி  எங்கள் பகுதியை சேர்ந்த சிலரை  அவிநாசிபாளையம் போலீசார்  காவல்நிலையத்திற்கு விசாரணைக் காக அழைத்தனர். அங்கு எங்களிடம்  கைரேகை பதிவு செய்துவிட்டு,  புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்ட னர். இதேபோல் பலமுறை காவல் நிலையத்திற்கு எங்களை வர வழைத்து எங்கள் செல்போனை  வாங்கி அதிலிருந்தவற்றை போலீ சார் லேப்டாப்களில் ஏற்றிக் கொண்ட னர். மேலும் கைகளில் விலங்கிட்டு  அடித்தும், எங்களில் சிலரிடம் துப் பாக்கியைக் காட்டி மிரட்டியும்  சேமலைக்கவுண்டம் பாளையத்தில்  நடந்த மூவர் கொலை வழக்கை  ஒப்புக்கொள்ள மிரட்டுகின்றனர். எதற்காக இப்படி நடத்துகிறீர்கள் சம்மன் அனுப்பி எங்களை விசாரனைக்கு அழையுங்கள்.  முழு ஒத்துழைப்பு தருகிறோம் என  கூறியபோது சாதியின் பெயரைக்  கூறி இழிவாகப் பேசுகிறார்கள். கடந்த 20 நாட்களாக எங்கள் பகு தியை சேர்ந்தவர்களை காவல்நிலை யம் அழைத்து மிரட்டி வருகின்றனர். செய்யாத குற்றத்திற்காக எங்கள் மீது பொய் வழக்கு பதியப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே நீங்கள் இது குறித்து விசாரனை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த மனுவை பலவஞ்சிபாளை யம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தனித் தனியாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட  எஸ்.பி ஆகியோருக்கு வழங்கினர்.  மேலும் மனித உரிமைகள் ஆணை யம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதி மன்றம் ஆகியோருக்கும் அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உழவர் சந்தை: விலை நிர்ணயத்தில் உள்ளூர் மக்கள் அதிருப்தி

உதகை, பிப். 18- உதகை உழவர் சந்தையில் காய் கறி விலை நிர்ணயத்தை உள்ளூர் மக்கள் பாதிக்காமல் நிர்ணயிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை சேரிங் கிராசில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மார்க்கெட்டில் மலை காய்கறிகளுக்கு விற்கப்ப டும் விலையின் அடிப்படையில், உழ வர் சந்தையில் ஒவ்வொரு காய்கறி களுக்கு, 15 சதவீதம் விலை குறைத்து  வழங்க வேண்டும். தற்போது, உழவர்  சந்தையில், 95 கடைகள் விவசாயிக ளுக்கு வாரத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். மலை மாவட் டம் என்பதால் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை செயல்படு கிறது. மலை காய்கறிகளை விற்ப னைக்கு கொண்டு வரும் விவசாயி கள் 15 சதவீதம் காய்கறி விலையை  ஒரு புறம் குறைத்தாலும், மறுபுறம் சில காய்கறிகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி வந்துள்ளோம் என்று கூறி உள்ளூர் மார்க்கெட் விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால் காய்கறிகள் வாங்க வரும் உள்ளூர் மக்கள் அதி ருப்தியுடன் செல்கின்றனர்.  இதுகுறித்து நிர்வாக அலுவலர் சிவக்குமார் கூறுகையில், காய்கறி களுக்கான விலையை உள்ளூர் மார்க் கெட் விலையை பொறுத்து 15 சத வீதம் விலையை  நிர்ணயித்து விவ சாயிகள் விற்க வேண்டும். சில நேரங் களில் விலை நிர்ணயிப்பதில் ஒரு  சில போலி விவசாயிகள் எங்களிடம் தகராறு செய்வதால் அடிக்கடி பிரச் சனை ஏற்படுகிறது. இதை உயர் அதி காரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக நட வடிக்கை எடுக்க வேண்டும், என் றார். இப்பிரச்சனை குறித்து நுகர் வோர் கூறுகையில், உழவர் சந்தை நேரடியாக விவசாயம் செய்யும் விவ சாயிகளின் நலனுக்காக கொண்டு வந் ததாகவும், விவசாயிகளிடம் நேரடியாக பொருட்கள் வாங்கினால் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று நோக் கில் நாங்கள் வருகின்றோம். ஆனால் ஒரு சில நேரங்களில் உதகை மார்க் கெட்டில் விற்கும் விலையை விட  அதிகமான விலை உள்ளது. மேலும், இது சம்பந்தமாக அதிகாரியிடம் கேட்டால் முறையான பதில் கிடைப்ப தில்லை. எனவே இது சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு பலன் ஏற்படுத்தும் விதத்தில் உழவர்  சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.