districts

img

கொமரலிங்கத்தில் பட்டா இடத்தை அளவீடு செய்து தர வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 22 - மடத்துக்குளம் தாலுகா, கொமரலிங்கம் பகுதியில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்ட 67 குடும்பத்தினருக்கு நில அளவை செய்து தர மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொமரலிங்கம் பகுதி காட்டாளம்மன் கோயில் அருகில் விவசாய சங்கத்தின் தொடர் வலியுறுத்தல் காரணமாக 67  குடும்பத்தினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலவச  வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. எனினும் பல மாதங்க ளாக அந்த பட்டாவுக்கான நிலத்தை அளந்து வழங்காமல் அரசு நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில்  புதிதாக வழங்கப்பட்ட 67 பட்டாவுக்கு உரிய இடத்தை அளந்து  வழங்க வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி போராட்டம் நடத்தப் படும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந் தது. இந்த நிலையில் வருவாய்த் துறை சார்பில் சனியன்று  நிலப்பட்டாவுக்கான இடத்தை அளந்து தருவதாக கூறியிருந் தனர். ஆனால் மடத்துக்குளம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரி கள் சனியன்று அங்கு வரவில்லை, ஜூன் 25ஆம் தேதி செவ் வாய்க்கிழமை கட்டாயம் நில அளவை செய்து தருவதாக  அப்பகுதி வருவாய் ஆய்வாளர் நேரில் உறுதியளித்தார். இங்கு பயனாளிகள் திரண்டனர். அவர்களுடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர் பன் னீர்செல்வம், கிளைச் செயலாளர் ஆறுமுகம், விவசாய சங்க  பொருளாளர் காந்தி, ஞானப்பிரகாசம் ஆகியோர் அங்கு இருந்தனர்.